தன்னுடைய அப்பாவை கொல்ல முயற்சிக்கும் மகன்.. அசிங்கப்படுத்திய ராதிகா.! அவமானத்தின் உச்சத்தில் கோபி..

தற்பொழுதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது அந்த வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பு வரும் தொலைக்காட்சிதான் விஜய் டிவி விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யலாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்த்து வந்த நிலையில் இவை அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு உள்ளார் ராதிகா. அதாவது ராதிகாவின் பக்கத்தில் கூட கோபியால் நெருங்க முடியவில்லை.

மேலும் சரியாக உணவு இல்லாமல் இருந்து வரும் நிலையில் ஒரு பக்கம் கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியை வெறுப்பேற்றி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதாவது தற்பொழுது செழியன் மனைவி ஜெனி தற்பொழுது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் குடும்பத்தினால் இருப்பவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இதனை கோபியிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பாக்கியா காய்கறி வாங்கிக் கொண்டு வெளியில் நிற்கும் நேரத்தில் கோபியின் அப்பா ராமமூர்த்தி தாத்தா தாத்தா என கோபியை அழைத்து கிண்டல் செய்கிறார். இதனால் கடுப்பாகிறார் கோபி பிறகு வீட்டிற்கு சென்றவுடன் கத்தியை எடுத்துக் கொண்டு நான் இன்னைக்கு அவரை கொல்லாம விட மாட்டேன் என கூற ராதிகா சும்மா இருங்க கோபி என சமாதானப்படுத்துகிறார்.

மேலும் ராதிகாவிடம் கோபி மாவரைத்து இட்லி, தோசை செஞ்சு தருமாறு கேட்கிறார் அதற்கு ராதிகா இட்லி, தோசை ஊற்றுவதை பெரிய விஷயம் இதில் உங்களுக்கு மாவரைத்து தர வேண்டுமா என கூறும் நேரத்தில் கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியின் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது இவன் நன்றாக மாவரைப்பான் எனக் கூறிவிட்டு தாத்தா தாத்தா என சொல்லி ஜாலியாக இருப்பதாகவும் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment