தாத்தாவாக போற நேரத்துல புது மாப்பிள்ளையாக சிலர் தெரியிறாங்க என கோபியை வச்சு செஞ்ச ராமமூர்த்தி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த ஒரு நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமான கதையாம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்றைய எபிசோடில் கோபிக்கு லெட்டர் வந்த நிலையில் கோபி என்ற ஒருவர் இந்த வீட்டில் இல்லை என வீட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் எனவே ராதிகா ரேஷன் கார்டில் அட்ரசை மாற்ற வேண்டும் என கோபியை உசுப்பேத்தி விட அவர் பாக்கியா வீட்டிற்கு சென்று ரேஷன் கார்டு கேட்கிறார்.

அதெல்லாம் தர முடியாது என ராமமூர்த்தி கூற பிறகு பாக்கியாவிடம் அதிகாரமாக கேட்க அதற்கு பாக்கியா நான் உங்கள் பொண்டாட்டி கிடையாது எனக் கூறி சண்டை போடுகிறார். உடனே கோபி இப்பொழுது ரேஷன் கார்டு தர முடியுமா முடியாதா என கேட்க முடியாது எனக்கூறி அனுப்பி வைத்து விடுகிறார்கள். பிறகு இன்றைய எபிசோடில் ஜெசிக்கு காலையிலிருந்து வாமிட்டாக வருகிறது.

எனவே இதனை தன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடம் கூற அனைவரும் இவர் மாசமாக இருப்பதாக கூறி மகிழ்ச்சியாக அடைகிறார்கள். செழியனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த நேரத்தில் காய்கறி வாங்குவதற்காக ராமமூர்த்தி வெளியில் நிற்கிறார் அந்த நேரத்தில் கோபி மற்றும் ராதிகா இருவரும் வெளியில் சென்று விட்டு காரில் இருந்து இறங்குகிறார்கள்.

இதனைப் பார்த்தவுடன் ராமமூர்த்தி நான் கொள்ளு தாத்தா ஆகப் போறேன் தாத்தாவாக போற நேரத்துல சில பேரு புது கல்யாணம் பண்ணிக்கிட்டு மாப்பிள்ளை போல் சுற்றி வருகிறார்கள் என கூற இதனைக் கேட்டவுடன் கோபி என்ன அப்பா பேசுறீங்க என கேட்டு செல்கிறார் அதற்கு ராமமூர்த்தி நான் கொள்ளு தாத்தா ஆகப் போறேன் என்பதை கூறுகிறார் எனவே இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார் கோபி.

Leave a Comment