நேரம் பார்த்து பாக்யாவை பழி வாங்கும் கோபி மற்றும் ராதிகா.! கண்ணீருடன் பாக்கிய லக்ஷ்மி இன்றைய எபிசொட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் கோபி படும் பாட்டை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இனியாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே அவரை அழைத்துக் கொண்டு கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது இனியாவிற்கு என்ன ஆச்சு என பதட்டத்தில் பாக்யா ராதிகா வீட்டிற்கு வருகிறார் இது குறித்த எபிசோட் களில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது இனியா பாக்கியாவிடம் சண்டை போட்டுக் கொண்டு தற்போது கோபி ராதிகா வீட்டில் இருந்து வருகிறார் இதனால் பாக்கியா மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.

மேலும் இனியாவும் தன்னுடைய அம்மா ஞாபகம் இருப்பதாக கோபியிடம் கூற பிறகு கோபி என்னுடன் தான் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இனியா டூர் சென்றுள்ள நிலையில் அங்கு பஸ் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இதனைப் பற்றி கோபி பாக்கியா இருவருக்கும் தெரிய வர அனைவரும் பதட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இனியாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவே கோபி வீட்டிற்கு அழைத்து வருகிறார். எப்படியாவது இனியவை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார் அங்கு இனியாவை பார்க்க வேண்டும் என சொல்ல கோபி இனியா என்னுடைய மகள் அவளை நீ எதற்கு பார்க்க வேண்டும் என கேட்கிறார்.

பிறகு பாக்கியாவும் இனியாவை பார்க்காமல் நான் இங்கிருந்து போக மாட்டேன் என பிரச்சனை செய்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ராதிகா திடீரென வந்து பாக்யாவிடம் என்னுடைய வீட்டில் ஏன் பிரச்சனை செய்வதாக கேட்கிறார் அப்பொழுது பாக்கியா என்னுடைய மகள் விஷயத்தில் தலையிட நீ யார் எனக் கேட்க இதனால் பெரிய பிரச்சனை உருவாகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment