வீட்டுக்குள்ளேயே இருந்துகிட்டு வேலையை காட்டும் ராமமூர்த்தி.! ராதிகாவிடம் வசமாக சிக்கும் கோபி.! பரபரப்பாகும் பாக்கியலக்ஷ்மி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமூக காலங்களாக மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது தற்பொழுது இனியா ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.  எனவே தன்னுடைய பேத்தியை பார்க்க வேண்டும் என்பதற்காக ராமமூர்த்தியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் ராதிகா பயத்தில் இருக்க பிறகு கோபி சமாதானப்படுத்துகிறார்.

இந்நிலையில் தாத்தா இனியா இருவரும் கேரம் விளையாடிக் கொண்டிருக்க இதனை பார்த்துக் கொண்டும் மையூ இருக்கிறார் பிறகு தாத்தா மயூவையும் அழைத்து விளையாட சொல்கிறார் மூவரும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு தேவையான காய்கறி மளிகை பொருட்களை வாங்குவதை பார்த்து கிண்டல் செய்கிறார் ராமமூர்த்தி.

பிறகு ராதிகாவிடம் லஞ்ச் டைம் ஆகிவிட்டது குழந்தைகளுக்கு பசிக்கும் அதனால் நீ பாக்யாவை போல் செம்மையாக சமைத்து எங்க அப்பாவை அசைத்துவிடு என்று சொல்கிறார் கோபி. அப்பொழுது ஹாலில் இருந்து பசிக்குது என்று ராமமூர்த்தி தாத்தா சத்தம் போடுகிறார் இதனால் ராதிகா கோபியை முறைத்துக் கொண்டே சமைப்பதற்காக செல்கிறார்.

பிறகு ராதிகாவும் சமைத்து தர சாம்பாரை பார்த்துவிட்டு ராமமூர்த்தி இது என்ன கார குழம்பு என கேட்கிறார் இல்லை அது சாம்பார் தான் என ராதிகா கூற அதற்கு ராமமூர்த்தி பருப்பையே காணும் என சொல்கிறார் சூப்பராக இருப்பதாக கோபி கூறுகிறார் ஆனால் இனியா ராமமூர்த்தி இருவருக்கும் இந்த சாப்பாடு பிடிக்கவில்லை எனவே ராமமூர்த்தி சாப்பாடு நல்லா இல்லை என கூற மீண்டும் ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இனியாவிற்கு தன்னுடைய அம்மா நினைப்பு வர இதனைப் பற்றி கோபியிடம் கூறுகிறார் அதற்கு கோபி தன்னை விட்டு பிரிய கூடாது என இனியாவிடம் சத்தியமா வாங்கிக் கொள்கிறார் இது ராமமூர்த்திக்கு தெரியவில்லை எனவே இதற்கு மேல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment