மகனுக்கு பதிலாக அமிர்தாவிடம் பேசிய பாக்கியா.! வசமாக மாட்டிக் கொண்ட இனியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இனியா ஸ்கூலில் போன் யூஸ் பண்ணி மாட்டிக்கொண்ட நிலையில் ஆசிரியர் உன் பெற்றோரை நாளைக்கு அழைத்து வந்தால் மட்டுமே இந்த பள்ளியில் படிக்க முடியும் இல்லை என்றால் டிசி கொடுத்து விடுவோம் என கூறுகிறார்கள்.

எனவே இனியா அடுத்த நாள் நான் ஸ்கூலுக்கு போகவில்லை என கூற பாக்யா கட்டாயப்படுத்தி எழிலுடன் அனுப்பி வைக்கிறார். இந்நிலையில் இனியாவுடன் மாட்டிய மற்ற இவருடைய தோழிகள் தங்களுடைய பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் ஆனால் இனியா பெற்றோர் யாரும் வராத நிலையில் இனியா வெளியில் நிற்கிறார்.

பிறகு இன்னைக்கு உன் பெற்றோர் வரவில்லை என்றால் டிசியுடன் நீ வீட்டிற்கு போக வேண்டியதுதான் எனக் கூறியவுடன் இனியா அழுகிறார். பிறகு தன்னுடைய அப்பா கோபியை போன் பண்ணி வர சொல்ல நடந்ததை அனைத்தையும் கூறுகிறார் கோபியும் வந்து பேசிவிட்டு செல்கிறார். மற்ற ஒரு ஆசிரியர் பாக்யாவிடம் இதனைப் பற்றி கூறுகிறார் பாக்யாவும் ஸ்கூல் இருக்கு வருகிறார்.

பிறகு ஒருபுறம் அமிர்தா ஆபீசுக்கு வரவில்லை என்பதால் எழில் தன்னுடைய நண்பன் சதீஷ் மூலம் போன் பண்ணி கேட்க சொல்கிறார் ஆபீசுக்கு வராதது போல் கூறுகிறார். பிறகு எழில் இதனைப் பற்றி பாக்யாவிடம் கூற பாக்கியா அமுதாவிற்கு ஃபோன் செய்து கண்டிப்பாக நீயும் எழிலும் சேர்வீங்க கவலைப்படாதீங்க என கூறி ஆதரவு அளிக்கிறார். பாக்கியா எழிலுக்கும் ஆதரவளிக்க இருவரும் மனதை தேர்த்திக்  கொள்கிறார்கள்.

Leave a Comment