பாக்கியாவின் கேண்டின் திறப்பு விழாவிற்கு வந்து ராதிகாவிடம் மாட்டியா கோபி.! ஒருவழியாக விளக்கேற்றிய ஈஸ்வரி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் கோபி ராதிகா விடம் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் கேண்டின் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவிற்கு பலரும் வருகை தந்திருக்கும் நிலையில் ஈஸ்வரி கேண்டினை விளக்கேற்றி திறந்து வைப்பதற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் பாக்கியா இருந்து வருகிறார். ராதிகா கோபி, இனியா என யாரையும் பாக்யாவின் கேண்டின் திறப்பு விழாவிற்கு போகக்கூடாது என கூறிய நிலையில் கோபியும் இனியாவின் மனதை மாற்றலாம் என்பதற்காக காரில் அழைத்து செல்கிறார்.

அங்கு ஷாப்பிங் போலாம் என கூற இனியா முடியாது கேண்டீன் திறப்பு விழாவிற்கு போகவேண்டும் நான் அண்ணன்கள் கூட இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என சொல்ல அதற்கு கோபி முடியாது என கூறுகிறார் பிறகு இனியா இதற்கு மேல் உங்க கூட நான் இல்லை அம்மா கிட்ட போறேன் என சொல்ல சரி என கூறிவிட்டு இனியாவை கேண்டின் திறப்பு விழாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு சென்றவுடன் இனியாவை விட்டுவிட்டு கோபி வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ராதிகா வருகிறார் நீங்க இங்க என்ன பண்றீங்க என கேட்க உடனே கோபி பதட்டத்தில் இனியவை விடறதுக்காக வந்தேன் என சொல்ல நீங்களும் போய் விழாவை சிறப்பிக்கலாம்ல என ராதிகா சொல்ல அதற்கு கோபி அப்படியெல்லாம் இல்லை என கூறுகிறார்.

பிறகு ராதிகா நான் வரலன்னு தான் சொன்னேன் ஆனா இந்த மேனேஜர் ஃபோன் பண்ணி வர சொல்லி டார்ச்சர் பண்றாரு வரக்கூடாதுனு நினைச்ச இடத்திற்கு குடும்பத்தோடு வந்தாச்சு என சொல்ல பிறகு கோபி அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு ராதிகாவுக்கு அங்கு இருக்க பிடிக்காத காரணத்தினால் வெளியில் வர அந்த நேரத்தில் ஈஸ்வரியும் வருகிறார். அப்பொழுது ராதிகா வாங்க அத்தை என கேட்க என்னவோ நீ கூப்டு நான் வந்த மாதிரி வரவேற்கிற என்னுடைய மருமகளுக்காக இங்க வந்தேன் என சொல்லி அசிங்கப்படுத்துகிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment