சொடக்கு போட்டு இங்கிலீஷில் பேசி ராதிகாவை அலறவிடும் பாக்கியா.! தன் பங்குக்கு ராதிகாவை வேற லெவலில் நோஸ்கட் செய்த ஈஸ்வரி..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல விருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து கோபி ராதிகாவிற்கு எதிரான பல செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே ராதிகா மிகவும் அனைவரிடமும் அசிங்கப்பட்டு வருகிறார்.

அதாவது ராதிகா பாக்கியாவிற்கு கிடைக்கிறது கேண்டீன் ஆர்டரை தரவிடாமல் செய்த நிலையில் பிறகு தற்பொழுது மீண்டும் ராதிகா வேலை செய்து வரும் கம்பெனியில் பாக்யாவிற்கு கேண்டீன் செய்வதற்கான ஆர்டர் கிடைத்திருக்கிறது. எனவே இதனால் பாக்யாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ராதிகா இங்கிலீஷில் பேச பாக்கியா கற்றுக் கொள்வதாக கூறி விடுவார்.

இப்படிப்பட்ட நிலையில் பாக்யா இங்கிலீஷ் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த நிலையில் சில தினங்களாக கோச்சிங் கிளாஸ் செய்திருக்கிறார். எனவே இங்கிலீஷ் கற்று தரும் ஆசிரியராக பிரபல நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் மூலம் பாக்கியாவும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலீஷ் பேச கத்து கொள்கிறார்.

இதனை அடுத்து இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ஈஸ்வரி கேண்டின் திறப்பு விழா ராதிகாவின் கம்பெனியில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே இந்த விழாவிற்கு அனைவரும் வந்திருப்பதால் எழில் ஈஸ்வரி கேண்டீன் திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்பதாக கூறுகிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி வர அதனைப் பார்த்த ராதிகா வாங்க அத்தை என கூறுகிறார்.

ஆனால் ஈஸ்வரி நான் உன்ன பாக்க வந்த மாதிரி வரவேற்கிற நான் என் மருமகள் கேண்டின் திறப்பு விழாவிற்கு வந்தேன்  எனக் கூறிய அவமானப்படுத்துகிறார். இதனை அடுத்து ஈஸ்வரி விளக்கேற்றி கேண்டினை திறக்க குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர் இதனை பார்த்து ராதிகாவிற்கு கோபம் ஏற்படுகிறது.

பிறகு தனியாக நின்று ராதிகாவை பார்த்த பாக்யா இன்று நடந்த என்னுடைய கேண்டின் திறப்பு விழாவிற்கு வந்த உங்களுக்கு நன்றி என இங்கிலீஷில் பேச ராதிகா அதிர்ச்சி அடைகிறார். உடனே பாக்யா தெரியாத ஒரு விஷயத்தை வைத்து நம்பளை யாரோ ஒருத்தவங்க அடிக்கிறாங்கன்னா அவங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக் கூடாது என கூறுகிறார்.

Leave a Comment