தட்டிக் கேட்ட ராதிகாவை அனைவர் முன்பும் அசிங்கப்படுத்திய இனியா.! மாட்டிக்கிட்டு முழிக்கும் கோபி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ராதிகா கடும் கோபத்தில் இருந்து வருகிறார். மேலும் இவரை யாரும் மதிக்காமல் இருந்து வருவது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ராதிகா தொடர்ந்து பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் ஆனால் பாக்கியா எதைப் பற்றியும் கவலைப்படாமல் கேண்டினை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாக்யா பழனிசாமிவுடன் பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை மேலும் இவர்கள் இருவரும் வண்டியில் ஒன்றாக போனதை பார்த்த நிலையில் இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார்.

எனவே இதற்காக ஃபுல்லாக குடித்து வந்த கோபி ராதிகா விட மாட்டிக்கொண்ட நிலையில் அவரிடம் பாக்கியா எப்படி இருக்கிறாள் ஆனா ராதிகாவால் மிகவும் கஷ்டப்படுகிறேன் ரொம்ப டார்ச்சர் பண்றா சுத்த வேஸ்ட் பாக்கியா தான் பெஸ்ட் என கூறியது ராதிகாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே அடுத்த நாள் கோபி ராதிகாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அதேபோல் பாக்கியா வாக்கிங் செல்வதை பார்த்த கோபி பாக்யாவிடம் நீ பண்றது எதுவும் சரியில்ல அவன் கூட வண்டில எல்லாம் போற பிள்ளைங்க இருக்கிறது உனக்கு ஞாபகம் இல்லையா என கேட்க எனக்கு நீங்க சொல்றீங்களா உங்களுக்கு முதலில் பிள்ளைங்க ஞாபகம் இருக்கிறதா என சண்டை போடுகிறார்.

இவ்வாறு இது ஒரு பக்கம் சண்டையாக போய்க்கொண்டிருக்க மறுபுறம் இனியா தன்னுடைய நண்பனுடன் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ராதிகா இனியாவை வீட்டிற்கு வர சொல்ல இனி இங்கே உட்கார்ந்து சாப்பிட்டால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கூறுகிறார். பிறகு வீட்டிற்கு சென்றவுடன் ஏன் டியூஷன் முடிஞ்சா நேர வீட்டுக்கு வர தெரியாதா எனக் கேட்க அதனை சொல்ல நீங்க யாரு என இனியா சொல்ல பிறகு ராதிகா போன் செய்து கோபியை வர சொல்கிறார்.

அப்பொழுது மையூவா இருந்தாலும் நான் இப்படி தான் பண்ணுவேன் எனக் கூறுகிறார். அவ ஒரு பொண்ணு எப்படி கேட்காமல் இருக்க முடியும் என சொல்ல இனியா கோபப்பட்டு அங்கிருந்து செல்கிறார். பிறகு கோபியிடம் நான் எது சொன்னாலும் எழுத்து எழுத்து பேசுறா பாத்துக்கோங்க எனக் கூற அதற்கு ராமமூர்த்தி ஏமா தலைவலிய உண்டாக்குகிற என கூறுகிறார்.

Leave a Comment