ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி.! திமிரு தனத்தை காமிக்கும் பாக்கியா..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் தான் நடிகர் கோபி. இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் முழுக்க முழுக்க காமெடியனாக மாற்றியுள்ளது.

அதற்கு ஏற்றார் போல் முகம்பாவனையிலேயே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாக்கியா தொடர்ந்து வெற்றினை கண்டு வரும் நிலையில் இவரைப் பார்த்து கோபி பொறாமை பட்டு வருகிறார். அந்த வகையில் கேண்டின் திறப்பு விழாவில் ரஞ்சித் பாக்கியாவிடம் வழிஞ்சதை பார்த்த கோபிக்கு கடுப்பானது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாக்கியா ரஞ்சித்துடன் வண்டியில் சென்றிருப்பதை தெரிந்து கொண்ட கோபி இன்றைய எபிசோடில் ஃபுல்லாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கலாட்டா செய்கிறார். மேலும் ராதிகாவை டார்ச்சர், சுத்த வேஸ்ட் என கூற பாக்யா தான் பெஸ்ட் எனவும் சொல்லி வருகிறார். எனவே அடுத்த நாள் கோபி எழுந்து தலை வலிக்குதுன்னு சொல்லிவிட்டு ராதிகாவை கிச்சனில் சென்று பார்க்கிறார்.

அதற்கு ராதிகா மனதில் இருப்பது தான் வெளியில் வரும் கோபி பாக்கியா தான் பெஸ்ட்டா அப்ப நா அங்க போங்க என சொல்ல நானா சொன்னேன் அப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டேனே எனக் கூறுகிறார். மேலும் ராதிகா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நீங்க எப்ப வேணாலும் போய்க்கலாம் குடிச்சிட்டு வந்தா இதுக்கு மேல இந்த வீட்ல இருக்க மாட்டேன்னு தான் நான் சொன்னேன் நீங்க எப்படி குடிச்சிட்டு வரலாம் என கேட்க வேறு வழி இல்லாமல் ராதிகாவின் காலில் விழுந்து கோபி கெஞ்சுகிறார்.

பிறகு ஒரு வழியாக ராதிகாவை சமாதானப்படுத்தி விட்டு வாக்கிங் செல்ல அங்கு பாக்கியாவை சந்தித்து எதற்கு அவன் கூட வண்டியில போற என கேட்டுக் கொண்டிருக்க அதற்கு நான் அப்படிதான் போவேன் என்ன ஃபாலோ பண்ணாதீங்க என இங்கிலீஷில் கூறிவிட்டு திமிராக செல்கிறார்.

Leave a Comment