பழனிசாமி உடன் பைக்கில் சென்ற பாக்கியா.! இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறும் கோபி..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது தொடர்ந்து சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது தற்போது ராதிகா வேலை செய்து வரும் கம்பெனியில் பாக்யாவிற்கு கேண்டீன் நடத்துவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது.

எனவே எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா தன்னுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் படித்து வரும் பழனிசாமி மற்றும் மற்றொரு தோழியுடன் சூப்பர் மார்க்கெட் செல்கிறார்.

அங்கு கோபியின் நண்பர் வந்துவிட பாக்கியா பழனிசாமி பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதனை அடுத்து பாக்கியா பிறகு அவரை பார்த்துவிட்டு நல்லா இருக்கீங்களா அண்ணா வீட்ல எல்லாம் எப்படி இருக்கிறாங்க என்ன பேசிக் கொண்டிருக்க அப்பொழுது பழனிசாமி மற்றும் தன்னுடைய தோழியையும் அறிமுகப்படுத்துகிறார்.

அதன் பிறகு கோபியும் அந்த கடைக்கு வர அவருடைய நண்பர் போட்டோவை காமித்து பாக்கியா, பழனிசாமி வந்ததை கூறுகிறார். உடனே கோபி அங்கு அவர்களை தேட ஆனால் பாக்கியா, பழனிசாமி கிளம்பி விட்டனர். பிறகு வாட்ச்மேனிடம் இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்பொழுது காணவில்லை என கேட்க அவங்க இப்பதான் பைக்ல கிளம்புனதாக கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி தன்னுடைய நண்பரிடம் எப்படி அவ வண்டியில போகலாம் என கோபப்படுகிறார். அதற்கு இன்னும் நீ பாக்யாவை மறக்கவில்லையா எனக் கேட்க அதற்கு கோபி யோசிக்கிறார். இவ்வாறு கோபி விவாகரத்து செய்து விட்டாலும் பாக்கியா வேறு ஒருவருடன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Leave a Comment