பாக்கியாவுடன் ரொமான்டிக் செய்யும் ரஞ்சித்.! பொறாமையும் பொங்கி எழும் கோபி.. சூடு பிடிக்க தொடங்கிய பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது தான் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விவாகரத்திற்கு பிறகு பாக்யா தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வரும் நிலையில் தற்பொழுது ராதிகா பணியாற்றி வரும் ஆபீசில் கேண்டீன் வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் மற்றும் ராதிகா, ஆபீஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துக் கொண்ட நிலையில் மேலும் இவர்களை தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் பாக்கியாவின் நண்பர்களான ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் வருகிறார்கள்.

இவர்கள் வரும் நேரத்தில் கோபி தன்னுடைய மகள் இனியாவை அழைப்பதற்காக வருகிறார். வந்தவுடன் ரஞ்சித் பாக்யாவிற்கு கை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒரு கட்டத்தில் பாக்யாவை பார்த்து உங்களை பார்ப்பதற்கு லட்சணமா, அழகா இருக்கிறீங்க என்ன உங்களுக்கு 30 வயசு ஆகுமா எனக் கேட்க உடனே பாக்யா ஷாக் ஆகிறார்.

மேலும் என்னங்க நான் எக்ஸ்ட்ரா சொல்லி புட்டனா இல்ல நீங்க ரொம்ப எங்க இருக்கீங்க என்ன சொல்ல பாக்கியா சிரித்துக்கொண்டே கீழே குனிய ரொம்ப வெக்கப் படுறீங்க என ரஞ்சித் கூறுகிறார். இதனை கோபி பார்த்துவிட்டு அதிர்ச்சியாகுவது போல் ரியாக்ஷன் கொடுக்கிறார். இவருடைய ரியாக்ஷன் தான் அல்டிமேட்டாக இருக்கிறது. வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி எழுகிறார்.

மேலும் பாக்கியா அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஈஸ்வரி யார் இவர்கள் எல்லாம் எனக் கேட்க அதற்கு இனியா அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் போறாங்களா அவங்க படிக்கும் இவருடைய நண்பர்கள்தான் எனக் கூற கோபத்தில் ஈஸ்வரி கிளம்புகிறார். இவ்வாறு ரஞ்சித் இந்த நாடகத்திற்கு வந்திருப்பது சுவாரஸ்யத்தை அதிக அளவில் ஏற்படுத்த இருக்கும் நிலையில் இதற்கு மேல் கோபியோட உண்மையான முகம் தெரிய வரப்போகிறது.

Leave a Comment