தனது அம்மாவிற்காக ராதிகாவை எதிர்த்து பேசிய கோபி.! திருடன் என்று ரொமான்ஸ் செய்த பாக்கியா.. இனியாவால் வெடித்த புதிய பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ராதிகா, மையூவை தூங்கவிடாமல் இனியா கோபியை சொல்லித்தர சொல்லி படித்துவரும் நிலையில் பிறகு கோபி இனியாவை தூங்க சொல்கிறார்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருச்சு மீண்டும் படிக்கலாம் என கோபி கூற அதற்கு இனியா 4 மணிக்கெல்லாம் படிக்கலாம் என சொல்ல ராதிகா, கோபி அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து செழியன் கிளையன்ட் மீட்டிங்காக சென்ற  நிலையில் எப்பொழுதும் போல அந்த பெண் செழியனிடம் நெருங்கி பழக முயற்சிக்கிறார் ஆனால் செழியன் வீட்டில் எனக்காக காத்திருப்பார்கள் என கூறிவிட்டு வந்துவிட செழியன் தூங்காமல் இருப்பதை பார்த்து ஜெனி ஏன் இப்படி தூங்காமல் இருக்கிறாய் என கேட்கிற அளவிற்கு அந்த பெண் என்னை ஃளேட் பண்றா எனக் கூற அதற்கு ஜெனி நீ ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்கிற என அதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.

இதனை அடுத்து பாக்யா இனியா இருவரும் ஹாலில் படித்துக் கொண்டிருக்க இருவரும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதனை பார்த்து கோபி வருத்தப்பட பிறகு தண்ணி பிடிப்பதற்காக செல்கிறார் இனியா யாரோ ஒருத்தவங்க கிச்சன் கு ள்ள போறாங்க என்ன பாக்யாவிடம் கூற திருடன் என்று நினைக்கிறேன் என சொல்கிறார்.

அதற்கு பாக்கியா சும்மா இரு என  சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று பார்க்க கோபி தண்ணி பிடிக்க வந்த பாக்யா நான் பயப்படுகிறார். இருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து பாக்யா இருவரும் தூங்கிவிட மறுநாள் இனியா சீக்கிரமாக போக வேண்டும் என கிளம்பி கொண்டிருக்கிறார் எனவே கோபியும் சீக்கிரமாக கிளம்பி இனியாவை கொண்டு போய் ஸ்கூலில் விடுவதாக சொல்கிறார்.

அதே நேரத்தில் ராதிகாவும் வந்து எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது எனவே மயூவை ஸ்கூலுக்கு அழைத்து செல்லுங்கள் என கூற அதற்கு நான் இனியாவ அழச்சிட்டு போலாம்னு சீக்கிரமா கிளம்பிட்டேன் நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல என சொல்ல இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது. இனியாவுக்கு நேரம் ஆயிடுச்சு என சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி உன் அம்மா தான் சட்டம் பேசுவால அவங்கள போய் ஸ்கூலில் விட சொல்லு என கூற நீங்க எதற்கு தேவையில்லாம எங்க அம்மாவ திட்டுகிறீர்கள் என கேட்கிறார். பிறகு இந்த நேரத்தில் பாக்கியா எழிலுக்கு போன் பண்ணி எழில் சீக்கிரமா வந்து இனியாவை ஸ்கூலுக்கு அழைத்துக்கொண்டு போ எனக் கூறுகிறார்.

எழிலும் வா லட்டு நம்ம ஸ்கூலுக்கு போகலாம் என கூற அதற்கு வேணாம் கோபியே அழைச்சிட்டு போவான் என சொல்ல கோபியும் நானே இனியாவை அழைத்துக்கொண்டு போறேன் என கூற ராதிகா முறைக்கிறார். உடனே பாக்கியா இல்லை இனியாவிற்கு நேரமாகிவிட்டது என சொல்ல கடைசியில் எழிலே இனியாவை ஸ்கூலுக்கு அழைத்து செல்கிறார். இதனை எல்லாம் பார்த்து கடுப்பான ராதிகா கோபியை ரூம்க்கு அழைத்து செல்கிறார் இதனால் கோபி கும்மா குத்து வாங்குவது உறுதி.

Leave a Comment