கோபிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்த ராதிகா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கோபியை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என ராதிகா குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் மேலும் ராதிகா நடந்து கொள்வது கோபிக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்பொழுது கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ள நிலையில் ராதிகாவும் கோபியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் ஹோட்டல் ஒன்றில் தங்கி வருகிறார் மேலும் சமீப காலங்களாக இந்த சீரியல் திரைக்கதையை மிஞ்சும் அளவிற்கு இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமாவில் கோபியிடம் பேசும் ராதிகா டீச்சர் தான் உங்களுடைய மனைவியை தெரிந்திருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காது உங்கள டிவோர்ஸ் செய்ய விட்டிருக்க மாட்டேன் நீங்களும் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க மாட்டிங்க என கூறுகிறார்.

உடனே அதற்கு கோபி நிறுத்து ராதிகா எப்பொழுதும் டீச்சர் டீச்சர் என்று அவளை பற்றியே பேசிகிட்டு இருக்க என்ன பத்தி கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டியா உனக்கு தான் அவ டீச்சர் என்னை பொறுத்தவரை அவள் ஒரு டார்ச்சர் ஒவ்வொரு ஆம்பளைக்கும் தன் மனைவி குறித்து கனவு இருக்கும் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஆனால் என்னுடைய கனவுக்கேற்றார் போல் பாக்யா இல்லை என கூற அதனைப் பற்றி ராதிகா யோசிக்கிறார் தற்பொழுது அந்த ப்ரோமோ தான் வெளியாகி உள்ளது இவ்வாறு தற்பொழுது அடுத்து என்ன நடக்க போகுது கோபியை ஏற்றுக்கொண்டு ராதிகா திருமணம் செய்து கொள்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment