கோபி கஷ்டப்படுவதை பார்த்து கண்கலங்கி அழுவும் ராதிகா.! என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் பாக்யா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலைகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தற்பொழுது பாக்யா மற்றும் கோபிக்கு விவாகரத்து ஆகியுள்ள நிலையில் கோபியை வீட்டை விட்டு பாக்கியா வெளியேற்றி விட்டார். மேலும் ஒரு வருடத்திற்குள் இந்த வீட்டிற்க்காக கோபி செலவு செய்த 40 லட்ச ரூபாய் பணத்தை பாக்யா தந்து விடுவதாக சபதம் போட்டு உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கோபி தற்பொழுது ஹோட்டலில் தங்கி வருகிறார் மேலும் கோபி ஹோட்டலில் இருப்பதை பார்த்த ராதிகா கோபியின் இந்த நிலைமைக்கு நாம தான் காரணம் என கண்கலங்கி அழுகிறார்.இதனால் தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ராதிகா குழப்பத்தில் இருந்து வருகிறார்.மேலும் பாக்யா லட்சுமி இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என அவர் மீது கோபப்பட்டு வருகிறார்.

மேலும் பாக்யாவிற்காக தான் ராதிகா கோபியை விட்டு விலகி மும்பைக்கு  செல்ல வேண்டும் என திட்டமிட்டார். தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மகளையும் கூடவே அழைத்து செல்ல வேண்டும் என முடிவெடுத்து இருந்தார் பிறகு ராதிகா தனது மனதிற்குள் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைப்பது தற்பொழுது குடும்பத்தை விட்டு பிரிந்து பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு கோபி இப்படி நடுரோட்டில் தவிக்கிறார் எனவே கோபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ராதிகாவிற்கு வருகிறது.

இவ்வாறு தனது மனதிற்குள்ளேயே நினைத்து அழுது கொண்டிருக்கிறார் இதனை தொடர்ந்து ராதிகாவின் அண்ணன், அம்மா ஆகியோர்களும் இவர்களுக்கு துணையாக இருந்த வருகிறார்கள். இந்த நேரத்தில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனை பாக்யா பார்த்துவிட்டு செல்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பாக்கியாவை வீட்டில் உள்ள அனைவரும் திட்டி வருகிறார்கள் மேலும் இனியாவிற்கு ஸ்கூலில் எப்படி பணம் கட்டுவது என்று தெரியாமல் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி வருகிறார் பாக்யா. இதற்கு மேல் கேட்டரிங் தொழிலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறார்.

Leave a Comment