வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கும் ஜெனியின் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்த செழியன்.! பேரன்,பேத்தி பாக்குற வயசுல இதெல்லாம் தேவைதானா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ளாமல் பாக்யா கோபியை விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பாக்யா செய்தது தவறு என கோபத்தில் இருந்து வருகிறார்கள் ஆனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் 25 வருடங்களாக திருமணமாகி தன்னுடைய சுயமரியாதையை இழந்து தன்னுடைய குடும்பத்திற்குகாக பாக்கியா வாழ்ந்து வந்த நிலையில் இவ்வாறு அதனை கொஞ்சம் கூட யோசித்து பார்க்காத கோபி தன்னுடைய கல்லூரி காதலிக்காக இவ்வாறு விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது பெரிதும் தவறு.

இப்படி நிலையில் தற்போது கோபியின் விவாகரத்து செய்தி ஊர் முழுவதும் பரவ அனைவரும் இதனை பற்றி அரசல் புரிசலாக பேசி வருகிறார்கள். இவ்வாறு இது ஜெனியின் அம்மா காதுக்கும் செல்கிறது எனவே பாக்கியாவின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அம்மா அனைவரிடமும் கோபியை பற்றி கேட்கிறார் பிறகு செழியன் என்ன சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்து நிற்கிறார்.

அதன் பிறகு ஜெனி தனது அம்மாவை ரூமிற்கு கூட்டி செல்கிறார். உடனே செழியன் பாக்யாவிடம் இந்த அவமானம் எனக்கு தேவைதானா என கண்டபடி திட்டுகிறார் பிறகு ஜெனி தனது அம்மாவை சமாதானப்படுத்த முயற்சிகிறார். அதாவது எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீ கேட்கலாம் நான் இங்க சந்தோஷமா தானே இருக்கேன் ஆன்டி விஷயத்துல தலையிடாதே என ஜெனி தனது அம்மாவிடம் கூறுகிறார்.

ஆனால் என்னுடைய பெண்ணை இந்த வீட்டில கொடுத்து இருக்கேன் வெளியில கேள்வி கேட்டாலும் நானும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் பேரன் பேத்தி எடுக்கிற வாயசுல இப்ப எதுக்கு விவாகரத்து அப்படி என்ன பாக்கியா, கோபிக்கு சண்டை என  கேள்வி கேட்கிறார் ஆனால் ஜெனி எதுவும் சொல்லாமல் ஒருவழியாக  சமாளிக்க முயற்சி செய்கிறார் இப்படி கேள்வி கேட்டு வரும் நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment