ராதிகாவின் வீட்டிற்கு சென்று அசிங்கப்பட்ட கோபியின் அப்பா ராமமூர்த்தி.! ராதிகா எடுக்கப் போகும் முடிவு என்ன.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் ராதிகாவை சந்திப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்துள்ளார் மேலும் ராதிகாவின் வீட்டில் ராதிகா மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் இருக்கிறார்கள் அப்பொழுது ராதிகாவிடம் உனக்காகத் தான் டிவோர்ஸ் செய்யும் முடிவை எடுத்தேன் மேலும் எனக்கு யாரும் வேண்டாம் நீ மட்டும் இருந்தால் போதும் என முடிவு எடுத்தேன் தற்பொழுது என்னை வீட்டை விட்டு அவர்கள் துரத்தி விட்டார்கள் யாரும் இல்லாத அனாதையாக இருக்கிறேன் நீயும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் செத்து விடுவேன் என கூறுகிறார்.

அதற்கு ராதிகா எனக்காக தான் எல்லாம் செஞ்சீங்கன்னு சொல்லிட்டு என்கிட்ட இருந்து ஏன் பாக்கியதான் உங்களுடைய மனைவி என மறைச்சீங்க என கேட்கிறார் பிறகு கோபி நான் உன்னிடம் இருந்து சில விஷயங்களை மறைத்து இருந்தாலும் உன் மேல் வைத்திருந்த அன்பு உண்மைதான் என கூறுகிறார். தற்பொழுது எங்கு போவது என்று தெரியாமல் காரில் சுத்தி வருகிறேன் எனக்கு இருக்கும் நம்பிக்கை நீ தான் என கூறுகிறார்.

பிறகு நீ யோசித்து முடிவை எடு என கூறிவிட்டு கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பிறகு ராமமூர்த்தி வீட்டிற்கு வர அந்த நேரத்தில் ராதிகாவின் வீட்டிலிருந்து கோபி வெளியில் செல்கிறார் அதனை பார்த்தவுடன் ராமமூர்த்தி இவன் பாக்கியா வீட்டை விட்டு அனுப்பியதும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துவிட்டான் போல என்ன நினைத்துக் கொண்டு ராதிகாவினை பார்ப்பதற்காக அவர் என் வீட்டிற்குள் செல்கிறார்.

என் பையனின் மேல் தான் அதிகமாக கோபப்பட்டேன். அவனால் இரண்டு பெண்களின் வாழ்க்கை நாசமா போயிடுச்சு என நினைத்தேன். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் நேராக உன்னுடைய வீட்டிற்கு வந்தால் என்ன அர்த்தம் இதற்கு உடந்தையாக நீயும் தானே இருக்க என கூறுகிறார். எல்லா திட்டங்களையும் நீதான் போட்டியா எனக் கூற ராதிகா உண்மையை சொல்வதற்காக முயற்சிக்கிறார் ஆனால் ராமமூர்த்தி அவரை சொல்ல விடவில்லை.

ராதிகாவின் அண்ணன் சும்மா நிறுத்துங்க உங்கள் பையன் பண்ண தப்பிற்காக எல்லோரும் வந்து எங்க திட்டிகிட்டு இருக்கீங்க என சத்தம் போடுகிறார். எதற்காக வந்தார் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க பாக்கியா தான் அவருடைய மனைவி என்ற தெரிந்த பிறகு ராதிகா அவரிடம் இருந்து விலகி வருகிறாள் ஆனால் உங்களுடைய பையன் கோபி தான் விடமாட்டேன் என கூறுகிறார்.

எதுக்கு இங்க வந்துகிட்டு இருக்காரு எதுவாயிருந்தாலும் உங்க பையன் கிட்ட பேசுங்க என்ன அசிங்கப்படுத்தி ராமமூர்த்தி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். பிறகு வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் சாப்பிடாமல் இருக்க பிறகு எழில் பாக்யாவை சாப்பிட வைக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Leave a Comment