கோபியிடம் 40 லட்சம் பணம் தந்து விடுவதாக சபதம் போட்ட பாக்யா.! அட்ரா சக்க என்ன பாராட்டும் கோபியின் அப்பா

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் கோபியின் துரோகத்தை தாங்க முடியாமல் விவாகரத்து பத்தரகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கோர்ட்டிலும் விவாகரத்து வேண்டும் என பாக்யா கூறியுள்ளார்.

இது இவர்களின் குடும்பத்தினர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இப்படிப்பட்ட நிலையில் கோபி பாக்யவை மிகவும் கேவலமாக அசிங்கப்படுத்தி திட்டி வந்த நிலையில் பாக்யா மேலே சென்று தனது ரூமில் இருக்கும் டிரஸ்களைப் பெட்டியில் வைத்து வெளியில் எடுத்து வருகிறார் இதனைப் பார்த்து அனைவரும் பாக்யா வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என கூறி அவரிடம் பேசி வந்தார்கள்.

இவ்வாறு கோபி வீட்டை விட்டு வெளியே போக சொல்லி பாக்யா கையில் இருந்த பெட்டியை தூக்கி கீழே போட அதில் கோபியின் சட்டைகள் இருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது உடனே பாக்யா ஆண்கள் தப்பு செய்தால் பெண்கள்தான் அனுபவிக்க வேண்டுமா நீங்கள் வீட்டை விட்டு வெளியே போங்கள் என கூறுகிறார்.பிறகு உடனே கோபி இந்த வீட்டை 40 லட்சம் போட்டு கட்டி இருக்கிறேன் என்னுடைய ரத்தத்தை சிந்தி உழைத்து இருக்கிறேன் என கூறுகிறார்.

பாக்கியா முன்பு போல் உங்களுடன் ஒரே ரூமில் இருக்க முடியாது நீங்கள் இந்த வீட்டில் இருப்பது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூற பிறகு கோபி நீ இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த 40 லட்சம் ரூபாய் பணத்தை தந்து விடு நான் இந்த வீட்டை விட்டு செல்கிறேன் நான் போறேன் என கூற பாக்கியா பணத்தை திருப்பி தந்து விடுவதாக சபதம் போடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாக்யாவிற்கு துணையாக இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment