செல்வியும் பாக்கியாவும் ஒன்னு தான் என ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்பும் அசிங்கப்படுத்திய கோபி.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது 25 வருடங்களாக பாக்யாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த கோபி பாக்கியாவிடம் விவாகரத்து கேட்டதால் தற்பொழுது பாக்யாவும் தனது முழு சமதத்துடன் அவருக்கு விவாகரத்தை தந்துள்ளார் மேலும் இதனை முடித்து விட்டு பாக்கியா வீட்டிற்கு வர உடனே கோபி வீட்டிற்குள் வரக்கூடாது என தடுக்கிறார் பிறகு எழில் அம்மா வீட்டில் ஒன்றும் தங்க வரவில்லை அவர்களது உடைமைகளை எடுத்துக் கொள்ள வந்துள்ளார் என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்யாவிற்கு சொந்தமான பொருள் இங்கு எதுவும் இல்லை இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் என்னுடைய சம்பாதியத்தில் வாங்கியது என்று பாக்யாவை கோபி அசிங்கப்படுத்துகிறார் ஆனால் வீட்டில் இருக்கும் இனியா,மகன், மருமகள் என அனைவரும் பாக்யாவை வீட்டை விட்டு போக விடாமல் தடுக்கிறார்கள்.மேலும் பாக்யா இந்த வீட்டில் ஒரு சமையல்காரை மட்டும்தான் வீட்டில் வேலை செய்யும் செல்விக்கும் பாக்யாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் இந்த வீட்டிற்கு வேலைக்கு வருவார்கள்.

வீட்டில் இருப்பவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று வேலைக்காரி அளவிற்கு பாக்யாவை படும் கேவலமாக அவமானப்படுத்துகிறார் இந்த சமயத்தில் பாக்யா தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொண்டு வீட்டில் இருக்கும் தனது துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

மகள் இனியா பாக்கியாவை வீட்டை விட்டு போகக்கூடாது என தடுக்கிறார் விவாகரத்து ஆன பிறகு வேண்டுமென்றே கோபி பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார் பிறகு அவருக்கு பதில் அளிக்க கொடுக்கும் வகையில் பாக்யா பேச தொடங்கினால் இந்த எபிசோடு இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment