வீட்டிற்கு வந்து கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா.! பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. கோபி பாக்கியாவை பார்த்துவிட்டு சென்று நிலையில் அதனை கேட்ட எழிலிடம் பாக்கியா நான் எடுத்த முடிவு தவறில்லையே என கேட்க நிச்சயம் தப்பு கிடையாது பிடிக்காத வாழ்க்கை எதற்கு இவ்வளவு நாளாக வாழ்ந்த?நீ எப்பயோ வர விட்டு போயிருக்க வேண்டும், எங்களைப் பற்றி நீ எதையும் யோசிக்காத இருக்கிற கொஞ்சம் வாழ்க்கையாவது உன்ன பத்தி யோசிச்சு உனக்கு சந்தோஷம் கிடைக்கின்ற மாதிரி வாழ் என கூறுகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் எழுந்தவுடன் எழிலிடம் பாக்கியா எங்காவது வெளியில் போயிட்டு வா நீ ஏன் என்கூடயே இருக்கிறாய் என கூறுகிறார் பிறகு வீட்டுக்கு போகலாம் என கூற எழில் நீயாமா இப்படி சொல்ற என கேட்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் பாக்யாவை பற்றி பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா எழிலுடன் வந்து வீட்டின் முன் இறங்குகிறார்.

இதனைப் பார்த்த இனியா ,ஜெனி என அனைவரும் ஓடி சென்று பாக்யாவை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள். நீ வந்துடுவேன் என்று எனக்கு தெரியுமா என இனியா கூறுகிறார். நாங்க எல்லோரும் கூப்பிட்டு உன்னால் வராமல் இருக்க முடியாது என எனக்கு தெரியும் என்னை ஈஸ்வரி சொல்கிறார்.

அப்பாவை அழைத்து வரேன் எனக்கூறி விட்டு ஓடி போய் கோபியிடம் அம்மா வந்துட்டாங்க என சொல்ல கோபி அதிர்ச்சடைகிறார்.மேலும் கோபியை கீழே வருமாறு அவர் கூப்பிடுகிறார் நீ போ நான் அப்புறம் வருகிறேன் என்று சொல்கிறார் எனக்கு இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா கூட திரும்பவும் சண்டை போடாதீங்க நாம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம் என இனியா கூறுகிறார்.

அதன் பிறகு பாக்யா நான் குளிச்சிட்டு வரேன் என மேலே செல்கிறார் ஈஸ்வரி எழிலையும் போய் நீயும் குளிச்சிட்டு வா எனக் கூறுகிறார். பிறகு மேலே சென்ற இனியா பாக்யாவை கட்டி பிடித்து முத்தம் தருகிறார். அதன் பிறகு பாக்யாவுக்கு கோபி ரூமை திறந்து உள்ளே செல்ல கோபி அதிர்ச்சியோடு பார்க்கிறார்  இன்றைய எபிசோடு முடிவடைகிது.

Leave a Comment