கண்ணீருடன் அமிர்தா காலில் விழுந்த எழில்..! அதிர்ச்சியாக பார்த்த பாக்கியலக்ஷ்மி.! திருமணத்தில் வெடிக்க போகும் பூகம்பம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி தன்னுடைய வீட்டை விற்க முடிவு செய்துள்ள நிலையில் எப்படியாவது இந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என பாக்யா, எழில் இருவரும் பல முயற்சிகளை செய்தனர்.

ஆனால் அனைத்திற்கும் பல தடங்கள் வந்த காரணத்தினால் வர்ஷினி ஈஸ்வரியை சந்தித்து எழில் தன்னை திருமணம் செய்து கொண்டால் என்னுடைய அப்பா வீட்டை வாங்குவதற்கு தேவையான 40 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிடுவார் என கூற பிறகு செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் எழிலிடம் பேசுகின்றனர்.

ஆனால் எழில் அமிர்தாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூற ஒரு கட்டத்தில் நம்மளுடைய குடும்பம் நடுரோட்டிற்கு வராமல் இருப்பது உன்னுடைய கையில் தான் இருக்கிறது என எழிலின் காலில் ஈஸ்வரி விழுகிறார். எனவே வேறு வழியில்லாமல் எழிலும் வர்ஷினியுடன் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

இவர்களுடைய நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது எழிலின் முகத்தை பார்த்து பாக்கியா அவருக்கு விருப்பம் இல்லாததை தெரிந்து கொள்கிறார். எனவே பலமுறை எழிலிடம் பேச முயற்சித்தும் ஈஸ்வரி அதனை தடுத்த நிறுத்துகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்தமும் முடிய அந்த நேரத்தில் அமிர்தா மண்டபத்திற்கு வருகிறார்.

அமிர்தா வந்ததை பார்த்த ஈஸ்வரி அவரை மண்டபத்திற்கு வெளியே வேகமாக அழைத்து சென்று மிகவும் கேவலமாக திட்டி அனுப்புகிறார். அமிர்தாவும் செல்ல திடீரென எழில் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து வீட்டில் நடந்ததை கூறுகிறார் மேலும் வீடு வாங்குவதற்காக தேவைப்படும் பணத்தை வர்ஷினியின் அப்பா தருவதாக கூறியதனால் தான் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என அமிர்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க இதனை பாக்கியா ஜெனி இருவரும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

Leave a Comment

Exit mobile version