மண்டபத்திற்கு வந்த அமிர்தாவை பார்த்து அதிர்ச்சியடைந்த எழில்.! மணமேடையில் கணவன்- மனைவியாக நிற்கும் கோபி பாக்யா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான டூரிஸ்ட்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது எழில் மற்றும் வர்ஷினி இருவருக்கும் மிகவும் கோலாகலமாக நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது. அதாவது கோபி வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் எப்படியாவது அந்த வீட்டினை வாங்க வேண்டும் என எழில், பாக்கியா இருவரும் போராடுகிறார்கள்.

ஆனால் இவர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாக பிறகு ஈஸ்வரி வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் இந்த வீடு நமக்கு கிடைத்து விடும் நீயும் படம் எடுக்கலாம் என கூற ஒரு கட்டத்தில் காலில் விழுந்து விடுகிறார். பிறகு வேறு வழி இல்லாமல் எழில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார்.

அனைவரும் மண்டபத்திற்கு செல்ல அங்கு பாக்கியா எழிலை சந்தித்து உன்னுடைய சம்மதத்துடன் தான் இது எல்லாம் நடக்கிறதா என பேசிக்கொண்டு இருக்க உடனே ஈஸ்வரி வந்து அவனுடைய மனதை மாத்தாத எனக்கூறி அழைத்து செல்கிறார். எனவே இவர்களுடைய நிச்சயதார்த்த ஏற்பாடுகள் உடனே நடைபெற்ற  இன்றைய எபிசோடில் மோதிரம் மாத்திக் கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் அமிர்தா தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு மண்டபத்தில் வருகிறார். இதனைப் பார்த்த ஈஸ்வரி அமிர்தாவை வெளியில் அழைத்து சென்று உனக்கு எழிலை கல்யாணம் செய்து வைப்போன்னு நினைச்சியா எனக் கூறினார். அமிர்தாவை அழைத்துச் செல்வதை எழில் பார்த்து ஏங்குகிறார்.

மறுபுறம் நிச்சயதார்த்தத்தில் கோபி பாக்யாவுடன் ஜோடியாக நிற்க இதனை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். பிறகு கோபி ராதிகாவிடம் வர ராதிகா மயூவுக்கு ஏதாவது பங்க்ஷன் என்றால் ராஜேஷா வரப்போறாரு நீங்கதானே அப்பாவா இருக்க போறீங்க இப்ப மட்டும் நீங்க ஏன் அவங்க பக்கத்துல போயி நல்லா சிரிச்சு சிரிச்சுகிட்டு நிக்கிறீங்க என கேட்க அதற்கு பிறகு கோபி  சமாளிக்கிறான்.

Leave a Comment