அசிங்கப்படுத்திய ராதிகா… அதிரடி முடிவு எடுத்த பாக்கியா..! ஈஸ்வரியிடம் வாங்கி கட்டிக் கொண்ட அமிர்தா.. பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து பாக்யாவிற்கு ஆதரவான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதாவது பாக்கியா கோபிக்கு 20 லட்சம் தர இருக்கும் நிலையில் அந்த கடனில் ஒரே வாரத்தில் இரண்டு லட்சத்தை கோபியிடம் கொடுத்துள்ளார்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனவே இதனை அடுத்து ராதிகா பணிபுரியும் ஆபீசில் பாக்யாவிற்கு கேட்டரிங் செய்வதற்கான ஆர்டர் கிடைத்திருக்கிறது. எனவே ராதிகா பாக்கியாவிடம் இங்கிலீஷில் பேசி இது கூட தெரியாம இருந்தா எப்படி என அசிங்கப்படுத்துகிறார். உடனே பாக்கியா பிறக்கும் பொழுது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு பிறக்கிறது இல்லை.

அதற்கான சூழ்நிலை வரும் பொழுது கத்துக்கலாம் நானும் கத்துக்குறேன் என கூறுகிறார். பிறகு பாக்கியா செல்வி இருவரும் வீட்டிற்கு செல்ல அந்த நேரத்தில் இருவரையும் பார்த்து ராதிகா நான் இங்கு தான் வேலை செய்வேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என கேட்க அதற்கு செல்வி நீங்க இங்கதான் வேலை செய்வீங்க, எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டீங்க என்று எங்களுக்கு தெரியும் என கூற பிறகு பாக்கியா வந்து கேண்டி இல்ல நல்லா சாப்பிட்டு போங்க என கூறுகிறார்.

இதனை அடுத்து மறுபுறம் அமிர்தா ஈஸ்வரியின் ரூம்பிற்கு சென்று மாத்திரை எடுத்து தருகிறார். அப்பொழுது ஈஸ்வரி உன்னை யாரு ரூமுக்குள்ள வர சொன்னது என சத்தம் போட இதனை கேட்டு ஜெனி வருகிறார். உடனே ஈஸ்வரி இவள யாரு மாத்திரை எடுத்துட்டு வர சொன்னது இவ்வளவு எனக்கு பிடிக்கல என சொல்கிறார்.

அப்பொழுது அமிர்தா தான் உங்களை பார்த்தப்ப நீங்க நல்லா அசந்து தூங்கிட்டிங்க எனவே உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என நானே பாட்டிக்கு மாத்திரை தரலாம் என்று வந்தேன் என கூறுகிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்யா செல்வி இருவரும் வர இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment