பாக்கியாவிற்கு பக்க பலமாக இருக்கும் அமிர்தா.! ராதிகா அறிவுரை கூறியும் தன்னுடைய வேலையை காட்டிய இனியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் பாக்யா கோபிக்கு தர இருக்கும் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறார். அதாவது எழில் வீட்டை வாங்குவதாக கோபியிடம் சவால் விட்டு நிலையில் கடைசியில் வாங்க முடியாமல் போனது மேலும் இந்த வீட்டினை வாங்க வேண்டும் என்பதற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் பாக்யா தன்னுடைய மகனுடைய விருப்பம் இல்லாத ஒரு கல்யாணம் நடக்கக் கூடாது என்பதற்காக எழிலுக்கு பிடித்த அமிர்தாவை அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்து வைத்தார்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் எழல், பாக்கியா மீது கோபத்தில் இருந்து வருகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் கோபி வீடு விற்பதாக முடிவு செய்த நிலையில் அந்த கடனை அடைப்பதற்காக ராமமூர்த்தி தன்னுடைய கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை கோபிக்கு தருவதாக கூறியிருக்கிறார்.

ஆனால் கோபி அந்த சொத்தின் மதிப்பு என்னுடைய வீட்டிற்கு பத்தாது எனவே மேலும் இருபது லட்ச ரூபாய் பணத்தை விரைவில் தர வேண்டும் என கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாக்கியாவிற்கு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மிகப்பெரிய கேட்டரிங் ஆர்டர் கிடைத்திருக்கிறது. எனவே பாக்யாவில் திருமண ஆர்டரில்  மிகுந்த காரணம் செலுத்தி வருகிறார்.

இவருக்கு துணையாக அமிர்தாவும் செல்ல மண்டபத்தில் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது திருமணம் சொந்தக்காரர்கள் கூட்டம் நிறைய இருக்கிறது உங்களால் சமாளித்து விட முடியுமா எனக் கேட்க பாக்யா அதற்கு கண்டிப்பாக முடியும் எனக் கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

மறுபுறம் இனியா டியூஷனுக்கு சென்று ஒரு பையனிடம் பேசி வரும் நிலையில் அதனைப் பார்த்த ராதிகா கண்டிக்கிறார் கோபியும் நல்லா படிக்க வேண்டும் என இனியாவிடம் கூற அடுத்த நாள் டியூஷனுக்கு செல்ல அப்பொழுது இனியா அந்தப் பையனிடம் எப்படி என்னுடைய நம்பர் உங்களுக்கு கிடைத்தது என பேசி சந்தோஷப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment