மாமனார் – மாமியாரை எதிர்த்து எழிலை பார்ப்பதற்காக தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு சென்னை வந்த அமிர்தா.! நிச்சயதார்த்த மேடையில் எழில்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல திருப்புங்கள் இருந்து வருகிறது அதாவது எழில் அமிர்தாவை காதலித்து வந்த நிலையில் பல முயற்சிகளுக்குப் பிறகு அமிர்தா எழிலை காதலிக்க தொடங்கினார் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் அமிர்தா மற்றும் எழிலின் குடும்பத்தினர்களால் பிரச்சனை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழில் மற்றும் வர்ஷினி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற உள்ளது அந்த வகையில் இன்றைய எபிசோடில் எழில் தன்னுடைய குடும்பத்தினர்கள் அனைவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு வருகின்றனர் அங்கு வர்ஷினியின் அப்பா அவர்களை வரவேற்கிறார்.

பிறகு எல்லாரும் மேலே ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க 7 மணிக்கு நிச்சயதார்த்தம் மறுநாள் காலை 9 மணியிலிருந்து 9:30 மணி வரை முகூர்த்தம் என கூறுகிறார். மேலும் நிச்சயதார்த்தத்திற்கு மாப்பிள்ளைக்கு தேவையான டிரஸ்கள் அனைத்தையும் வர்ஷினி பார்த்து பார்த்து எடுத்து வச்சிருக்கா அது அவருக்கு சரியா இருக்கான்னு போட்டு பாத்துக்கங்க என கூற வர்ஷினி எழிலை கூட்டிக்கொண்டு அவருடன் ஈஸ்வரி செழியனும் ரூம்க்கு செல்கின்றனர்.

விருப்பமில்லாத எழில் மிகவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமிர்தா பேசிய வார்த்தைகளை நினைத்து கவலைப்படுகிறார். இந்த நேரத்தில் அமிர்தா, எழில் மற்றும் சதீஷ் இருவருக்கும் போன் போட இருவரும் அந்த போனை எடுக்காத காரணத்தினால் தன்னுடைய மாமனார் மாமியாரிடம் சென்னை போவதாக கூற அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர் ஆனால் அமிர்தா அவர்களை எதிர்த்து தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னை வருகிறார்.

இதனை அடுத்து எழிலுக்கு பிடிக்காமல் இதை எல்லாம் நடந்து வருவதால் பாக்யா ஏன் எழில் இப்படி அமைதியாக இருக்கிறான் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார். எனவே கண் ஜாடையில் எழிலை பார்த்து கண்களால் பாக்கியா கேட்க அதனை கவனித்து ஈஸ்வரி பாக்யாவை பேச விடாமல் தடுத்து வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

பிறகு கோபி, ராதிகா, மயூரா மற்றும் இனியாவுடன் மண்டபத்திற்கு வர செழியன் அவர்களை வரவேற்கிறார் இவர்களைப் பார்த்தவுடன் ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். சென்னை வந்ததும் அமிர்தா எழிலின் வீட்டிற்கு செல்ல அங்கு வீடு பூட்டி இருப்பது தெரிகிறது. எனவே பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் இந்த வீட்டில் இருப்பவர்கள் எங்கே என கேட்க அவர் எழிலுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதை பற்றி கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Leave a Comment