படிப்பறிவு இல்லாதவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிட வந்துட்டாங்க என பாக்யாவை மேடையில் அசிங்கப்படுத்திய ராதிகா.! நக்கலாக சிரிக்கும் கோபி..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகுதான் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாக்கியா காலனி செக்ரட்டரி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என ஈஸ்வரி கூறிய பிறகும் செல்வி கட்டாயப்படுத்தி இந்த தேர்தலில் பாக்யாவை நிற்க வைத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பாக்யாவை கோபி, ராதிகா இருவரும் அசிங்கப்படுத்தி உள்ளார்கள் அதாவது பழைய செக்ரட்டரி சரியாக காலனியை பார்த்துக் கொள்ளாத காரணத்தினால் அனைவரும் அவர் மீது கோபமாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாக்யா இந்த தேர்தலில் நின்றால் நல்லாயிருக்கும் என பலரும் நினைத்து வரும் நிலையில் கோபி பாக்கியாவிற்கு எதிராக ராதிகாவை இந்த தேர்தலில் நிற்க வைக்கிறார். எனவே தேர்தலில் பாக்கியாவை  செக்ரட்டரியாக நிற்க சொல்லி செல்வி கட்டாயப்படுத்துகிறார் இந்த நேரத்தில் கோபி ராதிகாவை அழைத்து வர என்னுடைய மனைவி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறுகிறார்.

மேலும் ராதிகா மைக்கில் பேசும் பொழுது துணி, பாத்திரம் போன்ற வீட்டு வேலைகளை செய்பவர்களால் எப்படி காலனியை பார்த்துக் கொள்ள முடியும் அதற்கு கொஞ்சம் படித்திருக்க வேண்டும் என பாக்கியாவை மிகவும் அசிங்கப்படுத்துகிறார்கள் இதனால் செல்வி கோவப்பட பாக்யாவும் கோபியை முறைக்கிறார்.

பிறகு பாக்கியா போட்டியிடுவதற்கான தேர்தல் பாமில் கையெழுத்து போடுகிறார். எனவே கோபி பாக்கியாவை மிகவும் நக்கலாக பார்க்கிறார் இனி வரும் எபிசோடுகளில் இந்த தேர்தலை வைத்து தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தேர்தலில் கண்டிப்பாக பாக்யா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் கோபி, ராதிகா இருவருக்கும் அசிங்கம் தான் கிடைக்கிற இருக்கிறது.

Leave a Comment

Exit mobile version