பக்காவாக சமைத்த ராதிகா எந்த ஹோட்டலில் வாங்கியது என கேட்டு மாட்டிக்கொண்ட கோபி.! எழில் அமிர்தா காதலுக்கு சிவப்பு கொடி காட்டிய ஈஸ்வரி வைரலாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா அனைவருக்கும் மிகவும் ருசியாக சமைத்து அசத்துகிறார் அதனை அனைவரும் நன்றாக இருப்பதாக சொல்வது போல் நினைத்து பார்க்கிறார். பிறகு அது வெறும் கனவு என புரிந்து கொள்கிறார் பின் அனைவரையும் சாப்பிட வர சொல்கிறார்.

அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க அவர்களுக்கு பிரியாணியும், முட்டையும் வைக்கிறார் எல்லோரும் சாப்பிட யாரும் எதுவும் சொல்லவில்லை பிறகு மயூராவிடம் சாப்பாடு நன்றாக இருந்ததா என்று கேட்க அப்பொழுது கோபி நன்றாக இருக்கிறது எந்த ஹோட்டலில் வாங்கினாய் என கேட்கிறார் உடனே ராதிகா முகம் சோகமாகிவிட்டது. ராமமூர்த்தி அதை எல்லாம் பார்த்துவிட்டு கோபி இனிமேல் இந்த ஹோட்டலில் வாங்கு என்ன சொல்கிறார்.

பிறகு ராதிகா சோகமாய் இருப்பதை பார்த்த ராமமூர்த்தி 25 வருஷமா விதவிதமாக சமைத்து போட்டவரிடம் ஒரு நாள் கூட நன்றாக இருப்பதாக சொன்னதில்லை நீ எதிர்பார்த்தது தவறு என கூறினார். மேலும் இதைத் தெரிந்து கொள்ளாத கோபி ராதிகாப்பிடம் எதற்காக கோபமாக இருக்கிற எனக்  கேட்க அதற்கு நீங்க தான் காரணம் என சொல்கிறார்.

அதாவது கோபி நான் என்ன செய்தேன் என கேட்க நான் சமைத்ததை ஹோட்டலில் வாங்கியதாக சொன்னது நீங்கதான் என சொல்கிறார் உடனே கோபி நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என சொல்லி ராதிகா கையில் முத்தம் கொடுக்கிறார். இதனைப் பார்த்த இனியா கோபம் அடைகிறார் அதன் பிறகு கோபி சமாதானம் செய்ய ராதிகா சிரிக்கிறார்.

மறுபுறம் பாக்கியா, எழில்பேசிக் கொண்டிருக்கும்போது ஜெனி வருகிறார் செழியன் பாட்டியிடம் பற்றி சொன்னதாக ஜெனி சொல்ல பாக்யாவும் எழிலும் அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுக்க இராமமூர்த்தி பற்றி ஈஸ்வரி கவலைப்படுகிறார் அந்த நேரத்தில் பாக்கியா அவருக்கு எதுவும் ஆகாது என சொல்ல உடனே எழில் வருகிறார்.

அப்பொழுது ஈஸ்வரி எதையோ பறிகொடுத்த மாதிரி ஏன் இருக்கிற எனக் கேட்க அப்போது ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்லு என கூற பாக்யா எதுவும் இல்லை என சொல்கிறார் பிறகு ஈஸ்வரி உனக்கும் அமிர்தாவிருக்கும் என்ன சம்பந்தம் என கேட்க எதுவுமில்லை என பாக்யா சொல்கிறார். பிறகு செழியன் என்னென்னமோ சொல்கிறான் அதெல்லாம் கேட்டால் எனக்கு பயமா இருக்குது என ஈஸ்வரி சொல்கிறார். உனக்கும் அமிர்தாவிற்கும் இடையே எதுவும் இருக்கக் கூடாது என ஈஸ்வரி சொல்லி விடுகிறார் மேலும் தனது தலையில் கையை வைத்து எழிலிடம் சத்தியமா வாங்கி கொள்கிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Leave a Comment