பிரியாணியை போட்டு இனியாவை கவுத்த ராதிகா.! வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் வசமாக மாட்டிக் கொண்ட கோபி.! இதோ இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தொடர்ந்து ஏராளமான டுவிஸ்டுகள் இருந்து வருகிறது மேலும் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு ரசிகர்கள் விரும்பி பாக்கியலட்சுமி சீரியலை பார்த்து வருகிறார்கள். இதன் காரணமாக டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இனியா பாக்யாவிடம் சண்டை போட்டுக் கொண்டு கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளார் ராதிகாவும் இனியாவை பாசமாக பார்த்து வந்த நிலையில் இனியாவிற்கு ராதிகாவை பிடிக்கவில்லை இதன் காரணமாக எதற்கெடுத்தாலும் ராதிகாவுக்கு மரியாதை கொடுக்காமல் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இனியா ராதிகாவிடம் என்னுடைய அப்பாவின் மனதை மாற்றி கண்டிப்பாக எங்களுடைய வீட்டிற்கு அழைத்து செல்வேன் என சபதம் எடுத்துள்ளார்.

இதனால் ராதிகா அதிர்ச்சி அடைய ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இவர்களை எதிர்த்து இருந்தால் நம்மளால் எதுவும் செய்ய முடியாது எனவே பாசமாக இவர்களை மடக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை செய்ய இருக்கிறார். அதில் முதல் கட்டமாக எப்படியாவது யூடியூப்பை பார்த்து சுவையாக சமைத்து அசத்தி விட வேண்டும் என்ற முடிவில் பிரியாணி செய்கிறார்.

பிறகு அனைவரும் சாப்பிட வர பரிமாறி சாப்பிட சொல்கிறார் இதனை சாப்பிட்டு விட்டு ராமமூர்த்தி சூப்பரா இருப்பதாக கூறுகிறார் இனியாவும் மகிழ்ச்சி அடைந்து உண்மையில் நல்லா இருக்கிறது என சொல்ல உடனே கோபி எந்த ஹோட்டலில் ஆர்டர் பண்ண ராதிகா என கிண்டல் அடிக்கிறார் எனவே ராதிகா கோபியை பார்த்த முறைக்கிறார்.

இவ்வாறு இதற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியல் சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது இனியா நேராக ராதிகாவிடம் மோத தயாராகியுள்ள நிலையில் ராதிகா இவர்களை பாசத்தால் மயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க இனிவரும் எபிசோடுகளில் அவர்களின் மீது பாசத்தை காமிக்க இருக்கிறார்.

Leave a Comment