சற்றும் எதிர்பார்க்காமல் கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி.! முழு வில்லியாக மாறிய ராதிகா.. இடையில் சிக்கிக்கொண்ட பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டு வருகிறார். அந்த வகையில் மூக்கு முட்ட குடித்து விட்டு கோபி நடு ரோட்டில் விழுந்து கிடந்ததால் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்யாவிற்கு போன் செய்து வர சொல்கின்றனர். பிறகு பாக்கியா எழியில் இருவரும் இணைந்து கோபியை அழைத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டில் விட ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு காலையில் எழுந்தவுடன் ராதிகா தன்னுடைய மகள் மயூவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புவதாக கூறுகிறார். இந்த நேரத்தில் கோபி ராதிகா எனக்கு கடைசி சான்ஸ் தருமாறு கெஞ்சுகிறார் ஆனால் ராதிகா கேட்காத காரணத்தினால் நடுரோட்டில் அனைவரும் முன்பும் காலில் விழுந்து கெஞ்ச பாக்கியாவின் குடும்பத்தினர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

என்னதான் கோபி தவறு செய்திருந்தாலும் ஈஸ்வரி கோபியை நினைத்து மிகவும் கஷ்டப்படுகிறார்.ஒரு கட்டத்தில் ராதிகா கோபியின் பேச்சைக் கேட்டு அவருடன் இருக்க ஒப்புக்கொள்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி கோவிலுக்கு சென்று இருக்கும் நிலையில் சாமி கும்பிட்டு விட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் இவரை பார்த்த ஈஸ்வரி கோபி எங்க கூட இருந்த வரையிலும் நல்லா தான்டா இருந்த இப்ப உனக்கு என்ன ஆச்சு. நீ ராதிகாவை விட்டுட்டு பேசாம நம்ம வீட்டுக்கு வந்துடு எனக் கூற கோபி ஷாக்காகிறார். மேலும் இதனை ராதிகாவும் ஒட்டு கேட்டு விடும் நிலையில் பிறகு ஆபீஸ்க்கு சென்றவுடன் பாக்கியாவை அழைத்து உங்க மாமியார் கோபி கிட்ட என்ன விட்டுட்டு வர சொல்றாங்க..

என்ன மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து விடலாம் என்று முடிவு பண்ணிட்டீங்களா கோபி இல்லாம இருக்க முடியாலயா என திமிராக பேச அதற்கு பாக்கியா நான் வேண்டான்னு தூக்கிப்போட்ட வாழ்க்கையை தான் நீங்க இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கீங்க என கூறுவதற்கு ராதிகா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment