நடு ரோட்டில் ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி.! பார்த்து கண்ணீர் சிந்தும் பாக்கியா குடும்பத்தினர்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி முரட்டுத்தனமாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார்.

எனவே இவருடைய ஃபோனிலிருந்து பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமிக்கு போன் செய்து உங்களுடைய கணவர் நடுரோட்டில் குடித்துவிட்டு கிடப்பதாக கூற பிறகு பாக்யா எழில் இருவரும் கோபியை அழைக்க செல்கின்றனர். அங்கு ராதிகாவுடன் வாழ முடியல மேடம் என புலம்புகிறார் மேலும் பாக்யா தான் பெஸ்ட் எனவும் கூறுகிறார்.

பிறகு பாக்கியா எழில் இருவரும் கோபியை ராதிகா வீட்டிற்கு விட செல்ல அங்கு இவர்களை பார்த்தவுடன் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். மேலும் இந்த ராதிகா கிட்ட விடாதீங்க மேடம் என்னால இவங்க கூட இருக்க முடியல அவள பாத்தாலே பயமா இருக்கு என கூற மேலும் கடுப்பாகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கோபி காலையில் எழ தலைவலி தாங்க முடியவில்லை இந்த நேரத்தில் ராதிகா மயூவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு செல்வதாக கூற கோபி போகாத ராதிகா எனக் கெஞ்சுகிறார். ஆனால் இதனை கேட்காத ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். மேலும் நடுரோட்டிற்கு சென்று காலில் விழுந்து போகாத ராதிகா நான் உன்ன இனிமே நல்லா பாத்துக்குறேன் எனக்கு ஒரு சான்ஸ் கொடு அக்கம் பக்கத்தினர்கள் எல்லாம் பாக்குறாங்க என கெஞ்சுகிறார்.

இவ்வாறு சத்தம் கேட்ட பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் அனைவரும் பார்க்க ஈஸ்வரி இதனைப் பார்த்து கடுப்பாகிறார். மேலும் குடும்பத்தில் அவர்கள் அனைவரும் பார்ப்பதை கோபி பார்த்து அதிர்ச்சி அடைகிறார் இவ்வாறு கோபியின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர்.

Leave a Comment