கோபியை நினைத்து கவலைப்படும் பாக்கியா.! ராதிகா எடுத்த அதிரடி முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு படாத பாடு பட்டு வருகிறார்.

அந்த வகையில் கோபி இனியா சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடுரோட்டில் குடித்துவிட்டு கிடக்க இந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் பாக்யாவிற்கு ஃபோன் செய்து உங்களுடைய புருஷன் நடுரோட்டில் குடித்துவிட்டு கிடப்பதாக கூறுகிறார் பிறகு பாக்யா, எழில் இருவரும் கோபியை அழைத்து வருவதற்காக செல்கின்றனர்.

கோபிக்கு பாக்கியா என தெரியாமல் அவரிடம் ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டேன் அவ கூட எல்லாம் யாராச்சும் வாழுவாங்களா நிம்மதியே இல்லை அதனால்தான் என்னுடைய மகளுடன் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன் இப்பொழுது அவளும் என்னை விட்டுட்டு போயிட்டா எனக்குன்னு யாரும் இல்லை என அழுகிறார்.

வீட்டிற்கு சென்றவுடன் ராதிகாவை பார்த்துவிட்டு ராதிகா கிட்ட விட்டுட்டு போகாதீங்க மேடம் அவளை பார்க்கவே பயமா இருக்கு என்ன அழைச்சிட்டு போங்க பாக்யா தான் பெஸ்ட் எனக் கூற இதனால் ராதிகா கோபப்படுகிறார். பிறகு ராதிகா உங்களால தான் என்னுடைய வாழ்க்கையை போச்சு இதற்கு மேல உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி விடுகிறார்.

மறுபுறம் பாக்கியா கோபியை நினைத்து அழுக எதில் இன்னமும் அவர் மேல உங்களுக்கு அன்பு இருக்கா அம்மா அப்படி இருந்தா அதை அழிச்சிடுங்க எனக் கூற அதற்கு பாக்கியா அவரு உங்க அப்பா இப்படி அவர் இருக்கிறதா பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்காதா எனக் கூறிய அழுக இதோடு எபிசோடு நிறைவடைகிறது.

இவ்வாறு கோபி பல விஷயங்களை செய்தாலும் பாக்கியா கோபியின் மீது மிகவும் அன்பாக இருந்து வருகிறார். அதேபோல் தற்போது தான் கோபிக்கும் பாக்யாவின் அருமை தெரிய வருகிறது எனவே அவரும் பாக்கியவை ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment