ராதிகா முன்பு கோபி அசிங்கப்படுத்தியதால் சாகத் துணிந்த இனியா.! மருத்துவமனைக்கு பதறி அடித்து ஓடிவரும் பாக்யா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி சொன்ன ஒரு வார்த்தையினால் இனியா சாகத் துணிந்து உள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்றைய எபிசோடில் ராதிகா கேண்டினுக்கு வர செல்வி மற்றும் பாக்கியா இருவரும் குட் ஈவினிங் மேடம் என கூறுகின்றனர். உங்களுக்கு ஈவினிங் ஆயிடுச்சுன்னு தெரியுதா அதெல்லாம் இருக்கட்டும் கேக் ரெடியா என கேட்க பாக்யாவும் செல்வியும் கேக் செய்ய முயற்சி செய்ததாகவும் ஆனால் வராதது போல நடிக்கின்றனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுங்க என கூற அதற்கு ராதிகா அதெல்லாம் வாய்ப்பே கிடையாது நீங்க கேண்டினை காலி பண்ணுங்க போகும்போது நான் கெண்டீன் பொருட்கள் எல்லாத்தையும் செக் பண்ணுவேன் டேமேஜ் ஏதாவது இருக்கான்னு பார்ப்பேன் இப்ப ஃப்ரீயா தான் இருக்கேன் இப்பவே பார்க்கிறேன் என உள்ளே செல்கிறார்.

உள்ளே போன ராதிகா அங்கு பலவிதமான கேக்குகள் தயார் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே என்ன மேடம் ஒரு கேக்குக்காக கேண்டின காலி பண்ணிட்டு கிளம்பிடுவேன் என்று நினைத்தீர்களா உங்கள மாதிரி படிச்ச நாலு பேரோட வழிகாட்டுதலோடு நான் இங்கு வரல எதுவுமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு போராடி இங்கு வந்திருக்கேன் சாதாரண ஒரு கேக்குக்காக மூட்டையை கட்டிட்டு கிளம்பிட மாட்டேன் என ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார்.

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்க அதன்பிறகு வீட்டில் இனியா போன் பார்த்துக் கொண்டிருக்கிற ராதிகா போதும் போனை வச்சிட்டு தூங்கு என சொல்ல இனியா வழக்கம் போல எதிர்த்து பேச கோபி நீ எதுக்கு எது சொன்னாலும் அவளை எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க என கேள்வி கேட்க இனியா நீங்களும் என்னை திட்டுறீங்க என அழுகிறார்.

ஆரம்பத்தில் இருந்து பார்த்துகிட்டே தான் இருக்கேன் நீ அவ எது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்ல மாட்டேங்குற என சொல்லி போன வச்சுட்டு போய் தூங்குங்க கூறுகிறார். எனவே அழுது கொண்டு இனியா வெளியே செல்கிறார் அதன் பிறகு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு டாடி ரொம்ப மாறிட்டாரு இனி என்னால அங்கேயும் போக முடியாது இங்கேயும் போக முடியாது என தாத்தா ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரை எடுத்துக் போட்டுக் கொள்கிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் இனியாவுக்கு பயம் வந்து விட தாத்தாவை எழுப்பி நடந்ததைக் கூற பதறிப்போன ராமமூர்த்தி கோபி ராதிகாவை எழுப்பி இனியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் ராமமூர்த்தி பாக்யாவிற்கு ஃபோன் போட்டு இனியா மாத்திரை சாப்பிட்டதால் ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்ற விஷயத்தை கூற பாக்யா பதறி அடித்து வருகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment