நடுராத்திரியில் கோபிக்கு போன் செய்த ராதிகா.! எடுத்து பேசிய பாக்கியா.. இனிவரும் எபிசோட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் ஏராளமான எதிர்பாராத திருப்பங்களை வைத்து மிகவும் விறுவிறுப்பாக இயக்கிய வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து உருவாகி வருவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.தற்போது இந்த சீரியலில் ஒரு மணி நேரத்தில் 100 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை செய்ய இருக்கிறார் பாக்கியா.

இதனை பாக்கியா வெற்றிகரமாக செய்து முடித்தால் பெரிய திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இனிவரும் எபிசோடுகளில் சமைக்கும் முயற்சி வெற்றி பெற்று விடுகிறார். எனவே பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இவர் சமைக்க இருப்பதால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் முயற்சியில் வெற்றி பெற அனைவரும் இவரை புகழ்ந்து வருகின்றார்கள் எனவே இனி பாக்கியா தனது தொழிலை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளார்.இவ்வாறு ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பார்க்க பாக்கியா தற்போதெல்லாம் கோபியின் ரூமில்தான் தங்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நடுராத்திரியில் கோபிக்கு போன் வருகிறது பாக்கியா எடுத்து பேசுகிறாள் ராதிகா என்ன டீச்சரின் குரல் கேட்கிறது என அதிர்ச்சிடைகிறார். பிறகு என்ன டீச்சர் கோபியின் போன் உங்களிடம் எப்படி வந்தது என கேட்க அனைத்து உண்மைகளை சொல்கிறார்.  இவ்வாறு இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment