பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீரியல் குழுவினர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா வெளியேற  இருப்பதாக வதந்திகள் வெளியான நிலையில் அதற்கு சீரியல் குழுவினர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இந்த சீரியலில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா இந்த மூன்று கேரக்டர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே தொடர்ந்து ஏராளமான பரபரப்பான காட்சிகள் இடம் பெற்று வரும் நிலையில் மிகவும் வெற்றிகரமாக டிஆர்பியில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது.

இந்த சீரியலில் ராதிகாவாகா ரேஷ்மா நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் ஜெனிஃபர் நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார் எனவே அவருக்கு பதிலாக ரேஷ்மா இந்த கேட்டரிங் நடிக்க தொடங்கினார்.

சமீப காலங்களாக இவர் கொடூர வில்லியாக நடித்து வரும் நிலையில் மற்றொரு தனியார் சேனலில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாகவும் எனவே இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த சீரியலில் இதற்கு மேல் ராதிகா கதாபத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரேஷ்மா இந்த சீரியல் இருந்து விலகவில்லை என்றும் இது அனைத்தும் வதந்தியே என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என சீரியல் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. எனவே தொடர்ந்து ரேஷ்மா ராதிகா கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பார்.

நடிகை ரேஷ்மா எந்த அளவிற்கு சீரியல்களில் நடித்து வருகிறாரோ அதேபோல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் எனவே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என ஒரு தனியிடம் இருந்து வருவதால் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கேரக்டருக்கு  ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள்.

Leave a Comment