கண்ணம்மாவை தொடர்ந்து பாக்யாவை கலாய்க்க ஆரம்பித்த ரசிகர்கள்.. பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த எபிசோடு.

சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. வீட்டிற்கு தெரியாமல் கோபி சில மாதங்களாக ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் எப்படி இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய போகிறது என்பதை மையமாக வைத்து தான் அனைத்து எபிசோடுகளும் ஒளிபரப்பாகி வந்தது.

தற்பொழுதுதான் அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிய வர கோபி பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரிந்த பாக்கியா எரிமலையாக வெடித்து தனது மனதில் இருந்த அனைத்தையும் வெளிப்படையாக கூறி வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள புரோமோவில் நீங்க சந்தோஷமா உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்க, இனி ஏமாளியாக நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என கூறி பாக்யா வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.

images-8-5
images-8-5

ஏற்கனவே ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி ரோடு ரோடுடாக அலைந்த நிலையில் அதனை ரசிகர்கள் பெரிதளவில் கலாய்த்தார்கள். இந்த சீரியலினை தொடர்ந்து மௌன ராகம் 2 சீரியலில் சத்யாவும் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.

gobi
gobi

இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா நாளை வெளியாகும் எபிசோடுகளில் நடந்து கொண்டிருப்பது தான் வெளியாகும் என இதனை வைத்து மீம்ஸ்கள் வெளியாகி இருக்கிறது. கோபி செய்வது துரோகத்தால் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் இயக்குனர் பாக்யாவை நடக்க வைக்க வாய்ப்பிருப்பதாக நினைத்து கலாய்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

Leave a Comment