கருப்பு நிற பாவாடை தாவணியில் தனது அழகினால் ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் ரேஷ்மா பசுபிலிட்டி.! வைரலாகும் புகைப்படம்..

தற்பொழுது சினிமாவில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைய காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா.

இந்நிகழ்ச்சிற்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவி,சன் டிவி, கலர்ஸ் தமிழ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மாறி மாறி நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது அன்பே வா, கண்ணான கண்ணே, அபி ட்ரைலர், பாக்கியலட்சுமி, வேலம்பாள், நீதானே எந்தன் பொன் வசந்தம் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இவர் திரைப்படங்களில் நடித்ததை விட இந்த சீரியல்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தருகிறது.

இதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெப்சீரியலாக வெளிவந்த விலங்கு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

reshma2-1
reshma2-1

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற பாவாடை தாவணியில் தனது இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

reshma-3
reshma-3

Leave a Comment