விஜய் டிவிக்கு இனிதான் ஆப்பு.! டி ஆர் பி யில் உச்சத்தை தொட போகும் சன் தொலைக்காட்சி.!

சன் தொலைக்காட்சி ஒரு காலத்தில் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது இன்றுவரை இந்திய அளவில் நம்பர் ஒன் தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி சேனல் தான், டிஆர்பி யில் நீண்ட காலமாக முதலிடத்தில் தக்க வைத்துக்கொண்ட தொலைக்காட்சியும் சன் தொலைக்காட்சி தான்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி வந்த பிறகு சன் தொலைக்காட்சி கொஞ்சம் பின்னடைவை சந்தித்தது, அதற்கு முக்கிய காரணம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோ தான், இப்படியிருக்க சன் தொலைக்காட்சி தனது டிஆர்பியை விட்டுக்கொடுக்காமல் சீரியலில் இருந்து மெல்ல மெல்ல ரியாலிட்டி ஷோவில் மாறியது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் அனைத்து படப்பிடிப்பு மற்றும் சீரியல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதனால் சீரியல்கள் எடுக்க முடியாததால் தொலை காட்சிகள் அனைத்தும் பழைய நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

அந்த வகையில் சன் டிவி மெட்டி ஒலி சீரியலை இறக்கினார்கள். அதற்கு போட்டியாக விஜய் தொலைக்காட்சியில் லொள்ளுசபாவை களமிறக்கியது, இந்த நிலையில் சன் தொலைக்காட்சி ஒரு காலத்தில் செம போடு போட்ட அலைகள் சீரியலை தற்போது களமிறக்கி உள்ளார்கள், இதற்குப் போட்டியாக விஜய் தொலைக்காட்சி என்ன செய்யப் போகிறார்கள் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment