திரைப்படங்களையே தூக்கி சாப்பிடும் சீரியல்கள்.! இது கொஞ்சம் ஓவர் தான்..

சினிமாவில்தான் மற்ற மொழிப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வேறு மொழிகளில் எடுத்த படத்தை நடிகை நடிகர்களை மட்டும் மாற்றி கதையை படமாக்குகிறார்கள். ஆனால் இப்போது சின்னத்திரைகளிலும் சில சீரியல்களில் படத்தினை எடுத்து காப்பி செய்து நடித்து வருகிறார்கள். இதைப்பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் வெறுத்துப் போகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி கடந்த சில வாரங்களாக படத்தின் சீன்களை மட்டுமே காப்பி செய்து சீரியலை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த ஒரு மாதமாகவே ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை அப்படியே சீரியலில் கொண்டு வந்து இதயத்தை இடமாற்றம் செய்யும் பரபரப்பான காட்சிகளில் இந்த சீரியலில் காண்பித்து ரசிகர்களை எரிச்சலடைய வைக்கிறார்கள். இருந்தாலும் சீரியல் என்றாலே செண்டிமெண்ட் தான் அதற்காக எல்லாத்தையும் காப்பி எடுத்து வரக்கூடாது, என்று பாரதி கண்ணம்மா சீரியலை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

தற்போது மத்திய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலும் காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் சூர்யா- திரிஷா நடித்த ஆறு திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை சீரியலில் காண்பித்து வருகின்றனர். இதில் அபி வெற்றிக்காக மெடிக்கல் ஷாப்பிறக்கு மருந்து வாங்கச் சென்றபோது அங்கு கடைக்காரர் மருந்தை தர மறுத்தார். அதன் பிறகு மருந்தை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார். இந்த சீன் ஆறு திரைப்படத்தை பச்சையாக காப்பியடிப்பது என்று நன்றாகவே தெரிகிறது.

அதைப்போன்றே ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலிலும் பிடிக்காத திருமணத்தை பெற்றோர்களுக்காக சம்மதித்து வாழ்ந்து கொண்டு இருவருக்கும் பிடிக்காத நிலையில் விவாகரத்து செய்வதாக முடிவுசெய்து அப்போது ஆறு மாதங்களுக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை கூறி இவர்களுக்கிடையில் காதல் வந்து ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு சேர்வார்கள் என்பதை மோகன்-ரேவதி நடித்த ‘மௌன ராகம்’ திரைப்படத்தை பச்சையாக காப்பி செய்து வருகிறார்கள்.

எனவே ‘மௌனராகம்’ திரைப்படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் அப்படியே நடித்து படமாக்கி வந்தார்கள். அதன் பிறகு ஒரு சீரியலை கூட விட்டு வைக்க வில்லையா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘என் கணவன் என் தோழன்’ என்ற சீரியலை தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ராஜா ராணி சீரியல், இப்படி படங்களைக் காப்பியடித்து சீரியல் எடுத்து வருவதால் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Leave a Comment