சூப்பர் ஹிட் சீரியலை திடீரென முடித்த விஜய் டிவி.! அதிகாரப்பூர்வமான அறிவிப்பாள் சோகத்தில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட் சீரியலை திடீரென விஜய் டிவி முடித்திருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி 2.

இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வந்த நிலையில் சித்து மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து ஆரம்பத்தில் நடித்து வந்தனர். அதன் பிறகு நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலில் ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் திடீரென விலகினார். எனவே அவருக்கு பதிலாக சந்தியா கேரக்டரில் ரியா என்பவர் நடிக்க தொடங்கினார் இவருடைய கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திடீரென அவரும் மாற்றப்பட்டார்.

எனவே இதன் காரணமாக இவரை மேலும் கோகுலத்தில் சீதை போன்ற இன்னும் சில சீரியல்களில் நடித்து வந்தா ஆஷா கௌடா சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இவருடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

இவருடைய கேரக்டர் மட்டுமல்லாமல் ஏராளமான கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் இதனால் டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கியது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சீரியல் விரைவில் முடியப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தகவல் உறுதியாகி உள்ளது.

raja rani 2
raja rani 2

அதாவது ராஜா ராணி 2 சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பின் பொழுது அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட சீரியல் குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் அதில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர். இவ்வாறு இந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment