தான் மாசமாக இருப்பதை குடும்பத்திரிடமிருந்து மறைக்கும் முல்லை.! அறிவுரை கூறும் மீனா..! இன்றைய எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எதிர்பாராத பல காட்சிகள் அரங்கேறி வருகிறது. அதாவது மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை பிரித்து மூர்த்தியை நடுத்தெருவில் கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய இரண்டு கடைகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் தங்களுடைய பழைய கடை ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையினை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் மீனாவின் அப்பா நினைத்ததை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது ஏனென்றால் தொடர்ந்து அடுத்தடுத்து திருமணங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் வரும் நிலையில் இந்த கடை மிகவும் ராசி என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

மற்றொரு புறம் தனம் முல்லை இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலை நடத்தி வரும் நிலையில் சில காலங்களாக முல்லைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. மயக்கம் கொமட்டல் போன்றவை இருந்து வரும் நிலையில் இதனைப் பற்றி கதிரிடம் கூறுகிறார். கதிர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சின்ன பிரச்சினையாக இருக்கும் என விட்டு விடுகிறார்.

ஆனால் தனம் மாசமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனவே மருத்துவமனைக்கு போகலாம் என கூற இரண்டு நாட்கள் கழித்துப் போகலாம் என முல்லை சொல்லி விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் முல்லை பிரகனண்ட் கிட் வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அங்கு எதார்த்தமாக கதிர் வர மருத்துவமனைக்கு போகலாம் என கூப்பிடுகிறார் ஆனால் முல்லை வராமல் மறுத்து விடுகிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் டெஸ்ட் எடுத்து பார்க்கும் பொழுது தான் கர்ப்பமாக இருப்பது முல்லைக்கு தெரிய வருகிறது ஆனால் அதனை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் மறைக்கிறார் மேலும் மீனா எவ்வளவு கேட்டும் எதுவும் கூறவில்லை உண்மையாக நாம் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை நம்ப முடியாமல் முல்லை இதனை தன்னுடைய குடும்பத்தினர்களிடம் சொல்லாமல் இருந்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment