முத்தக் காட்சிகளில் நடிக்க பயந்த விஜய் சேதுபதி – இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடிய சம்பவம்.? எந்த படத்தில் தெரியுமா..

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டி நடிப்பதால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அதன் காரணமாக விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழி பக்கமும் வாய்ப்புகள் குவிகின்றன இதனால் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தில் வில்லன் சந்தானம் கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி கையில் மாமனிதன், விடுதலை போன்ற பல்வேறு திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சீனுராமசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி வசுந்தரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகையின் உதட்டில் ஏதோ ஒரு கரை இருக்கும் அதை துடைக்கும் பொழுது முத்தம் கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் முத்தம் கொடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் நடித்ததால் சரியாக வராது.

அதனால் முத்தம் கொடுக்கிற மாதிரி இருந்தால் கொடுத்துவிடு அதனால் வரும் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என கூறினாராம் ஆனால் விஜய்சேதுபதி ஹீரோயினுக்கு தெரியாமல் எப்படி கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தாராம் ஒரு சமயத்தில் சொல்லிவிட்டு கொடுத்துவிடலாம் என்று விஜய் சேதுபதி நினைத்தாராம் அதன்பின் ஹீரோயின் வந்து அவரிடம் ஓகே சொன்ன பின் அந்த காட்சியை எடுத்ததாக கூறினார்.

Leave a Comment

Exit mobile version