லிங்குசாமியின் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த விஜய்சேதுபதி – எந்த படத்தில் தெரியுமா.. வெளியே கசிந்த உண்மை.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் லிங்குசாமி இருப்பினும் அவருக்கு படங்களை இயக்குவதில் தான் அதிகம் ஆசை அந்த வகையில் லிங்குசாமி முதலில் ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் அந்தப் படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, ரன், பீமா, பையா போன்ற சிறப்பான படங்களை கொடுத்து..

தன்னை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டதோடு  நல்ல காசு பார்த்து வந்தார். இருப்பினும் ஒரு கட்டத்தில் இவர் தயாரிப்பின் மூலம் தனது காசுகளை எல்லாம் இழக்க நேர்ந்தது அதிலிருந்து மீண்டு வர சண்டக்கோழி 2 மற்றும் தற்போது கூட தெலுங்கில் வாரியர் என்னும் படத்தை இயக்கி உள்ளார்.

வாரியார் திரைப்படம் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் நடிகர் ராம் ஹீரோவாக நடித்துள்ளார். கீர்த்தி செட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் ஆதி நடித்துள்ளார். வருகின்ற ஜூலை 15 அன்று வெளியாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக தொடர்ந்து லிங்குசாமி பேட்டி கொடுத்து வருகிறார் அப்பொழுது சில சுவாரசிய தகவல்களையும்  வெளிப்படையாக கூறியுள்ளார். வாரியார் படத்தில் ஆதி கதாபாத்திரம் குறித்து அவர் சொன்னது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான்கு பேரை தேர்வு செய்துள்ளார்.

லிங்குசாமி மலையாள நடிகர் நிவின் பாலி, விஜய் சேதுபதி, ஆர்யா போன்றவர்களை அணுகி உள்ளார் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக வேறு வழி இன்றி நான்காவது நடிகர் ஆதியை இந்த படத்தில் தேர்வு செய்ததாக கூறினார். இந்த படம் ஆதிக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு கொடுக்கும் எனவும் அவர் சொல்லி உள்ளார் அந்த அளவிற்கு இந்த படத்தில் நல்ல காட்சிகள் அவருக்கு இருப்பதாக கூறினார்.

Leave a Comment