ஒரு படத்திற்கு ஒரு கோடி போய் தற்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்கும் விஜய்சேதுபதி..!

ஆரம்பத்தில் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்து தற்போது சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பத்து நாட்களில் மூன்று திரைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் இவர் அடுக்கடுக்காக திரைப்படங்கள் நடித்து வந்தாலும்  இவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சமீபத்தில் வெற்றியை கொடுக்கவில்லை. இதன் காரணமாக பல்வேறு சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை.

இதன் விளைவாக தான் தற்போது  இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார் இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான  துக்ளக் தர்பார், லாபம், அனாபெல்லே சேதுபதி ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை கொடுத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தனக்கு வாய்ப்பு வந்தபோது கதையை கேட்காமல் அட்வான்ஸ் தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு விஜய் சேதுபதி தலையாட்டி விடுவாராம். இப்படி தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் இவருக்கு மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் மற்ற மொழி திரைப்படங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் அதேபோல அந்த தயாரிப்பாளர்களும் விஜய்சேதுபதிக்கு கொடுக்க தயாராக உள்ளார்களாம். பொதுவாக விஜய் சேதுபதி இப்படி பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் மாஸ்டர் திரைப்படம் ஆகும்.

இவ்வாறு இந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் குவித்து விட்டார் இந்நிலையில் கமல் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்திலிருந்து கூட விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் இவ்வாறு மறுபடியும் விஜய் சேதுபதி ஒரு மாசான ரோலில் நடிப்பது மூலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

vijaysethupathi-1
vijaysethupathi-1

Leave a Comment