M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி.! என்ன சொன்னார் தெரியுமா..?

சினிமா உலகில் தானாக முன்வந்து ஒரு நடிகரும் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தான்  தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து ஒரு ரூட்டில் பயணிப்பார்கள். ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்த பிறகு அந்த நடிகர் அதிலிருந்து கீழே இறங்காமல் ஹீரோவாகவே நடிப்பது வழக்கம்.

ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் விஜய் சேதுபதி தான் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களின் மூலமாகத்தான் இந்த இடத்தை பிடித்து உள்ளேன் என்பதால் ஹீரோ என்பதையும் தாண்டி நல்ல கதைக்களம் இருந்தால் அவர் வில்லனாகவும், கெஸ்ட் ரோலாக இருந்தாலும் நடிக்கிறார். இதனால் அவருக்கான வரவேற்பு தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, இந்தியிலும் அதிகரித்துள்ளது.

தமிழில் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அதிலும் அவரது திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெறுவதால் தற்போது தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார். நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் அவர்களுடன் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி கைகோர்த்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மேலும் புதிதாக சமந்தா கைகோர்த்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.

இதில் நான் ஒரு ஓரமாக நின்று நடித்திருந்தேன் அதனால் அந்த படத்தில் என்னை அதிகமாக தெரிந்து இருக்க மாட்டீர்கள். ஆனால் நான் நடித்தேன் என வெளிப்படையாக கூறினார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது துக்ளக், தர்பார் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது அதை தொடர்ந்து இவரது லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment