ஷாருக்கான் மூலம் பள்ளி பருவக் காதலியை பழி வாங்கிய விஜய் சேதுபதி.. ஜவான் பட வாய்ப்பு கிடைத்தது இப்படிதான்.!

Vijay Sethupathi: விஜய் சேதுபதி தான் பள்ளி பருவத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலித்த பெண்ணை தற்பொழுது பழிவாங்கி வாங்கியாதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜெசி என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி தான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் சேதுபதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்ட பேசிய விஜய் சேதுபதி நான் பள்ளி காலத்தில் காதலித்த பெண்ணை ஷாருக்கான் வைத்து பழி வாங்கி விட்டதாக கூறியுள்ளார். அதாவது, நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தேன் ஆனால் அவரோ ஷாருக்கானை காதலித்தார்.

ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் அந்த பெண்ணை பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது பழிவாங்கி விட்டேன் என்றார். மேலும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரில் ஷாருக்கானை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியில் என் இருக்கை எங்கே இருக்கிறது என தேடி கொண்டிருந்தேன் ஷாருக்கானுக்கு பக்கத்தில் இருக்கை என்னுடையது என்பதை கண்டுபிடித்தேன் அவர் என்னை பாராட்டினார்.

அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அதன் பிறகு நடந்த பார்ட்டியில் ஷாருக்கான் என்னிடம் வந்து நான் உங்களைப் பற்றி சொன்னது உண்மை என்றார். ஷாருக்கான் அனைவரையும் மதிப்பது ஒரே மாதிரியாக நடத்துவார். ஷாருக்கான் சார் உங்களின் மூளை வேலை செய்யும் விதத்தை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன்.

நீங்கள் பதில் சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது நன்றி லவ் யூ சார்.. இங்கு அட்லி பற்றி பல விஷயம் சொன்னார்கள் அவருடன் வேலை செய்வது சவுகரியமாக இருந்தது அவரின் தெறி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அட்லி ஒரு கதையை திரையில் காட்டும் விதம் பிடித்திருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

ஜவான் படத்தில் கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கும் நிலையில் இதற்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கானை பார்த்த விஜய் சேதுபதி ஜி உங்களுக்கு வில்லனா நடிக்க ஆசையா இருக்கு ஜி என்று கூறியுள்ளார். உடனே அங்கிருந்த அட்லீயை அழைத்து விஜய்யை எனக்கு வில்லன் ஆக்கிடுங்க என தெரிவித்துள்ளார் ஷாருக்கான். அப்படித்தான் ஜவான் பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.