அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.! ஆத்தாடி இத்தனை கோடியா…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சுந்தர் சி இவர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று பாகங்களாக உருவாக்கி இருக்கிறது. இதில் இரண்டாவது பாகம் ஒரு அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால்மூன்றாவது பக்கம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது இதனை தொடர்ந்து தற்போது 4வது பாகத்தை இயக்க சுந்தர் சி ரெடியாகிவிட்டார். அந்த வகையில் அரண்மனை 4 பாகத்தில் சந்தானம், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரண்மனை மூன்றாவது பாகத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக தற்போது விஜய் சேதுபதி அரண்மனை திரைப்படத்தில் இணைய இருக்கிறார் இந்த நிலையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீப காலங்களாக கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை விட வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவருடைய நடிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி அரண்மனை திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாக தற்போது ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் வெளியாகியிருக்கிறது.

aranmanai 4

Leave a Comment

Exit mobile version