தேடி வந்த ஜோதிகா பட வாய்ப்பு.. வேண்டாம் என மறுத்த விஜய் சேதுபதி .! தட்டி பறித்த இளம் நடிகர்.

சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வரும் விஜய் சேதுபதி. ஹீரோ என்ற அந்தஸ்த்தையும் தாண்டி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து வருகிறார். அது ரசிகர்களுக்கும் பிடித்துப்போய் ஏற்றுக்கொள்வதால் விஜய்சேதுபதி தொடர்ந்து எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கிறார் அது அவருக்கு நாளுக்கு நாள் சினிமா உலகில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

இப்பொழுதும் தயங்காமல் நடிப்பில் அசத்துகிறார் அது ரொம்ப பிடித்து போய் உள்ளதால் விஜய் சேதுபதியின் சினிமா வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இப்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கோலாகலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல்வேறு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார் விஜய் சேதுபதி. இப்படி இருக்கின்ற நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அசிஸ்டெண்ட் ஆக இருந்த சரவணன் தமிழ் சினிமாவில் இவன் வேற மாதிரி, வலியவன் போன்ற சிறந்த படங்களை இயக்கி வெற்றி கண்டு உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் கிராமத்து கதை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி ஜோதிகா மற்றும் விஜய் சேதுபதி நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவர்களை சந்தித்து கதை கூறி உள்ளார் ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்க மறுத்து உள்ளனர் ஒருபக்கம் இவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் இருவருக்குமே கால்ஷீட் கிடைக்கவில்லை மேலும் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்ததால் வேறுவழியின்றி விஜய் சேதுபதிக்கு சொன்ன கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் அவர்களை நடிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பாக பரியேறும் பெருமாள்,  பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment