நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவனை “ஹிந்தி பக்கம்” போக சொன்ன விஜய் சேதுபதி – ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் காதல் காமெடி கலந்த படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் அண்மையில் கூட விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் காதல் திரைப்படத்தை எடுத்திருந்தார்.

படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஒரு நல்ல வசூலை அள்ளியது இதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், போடா போடி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அடுத்ததாக நடிகர் அஜீத் குமாருடன்  கூட்டணி அமைத்து  AK 62 படத்தை எடுக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்துடன் முதல்முறையாக கைகோர்க்க இருப்பதால் அந்த படத்தை சிறப்பாக கொடுக்க தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பான ஒரு கதையை எழுதி வருகிறார் என கூறப்படுகிறது அந்த கதை அஜித்துக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி பிடித்துப்போன ஒரு கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் தற்போது விக்னேஷ் சிவனை நம்ப ஆரம்பித்து உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியது, விக்னேஷ் சிவன் ரைட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

எனக்கு போடா போடி ரைட்டிங் ரொம்ப பிடித்து இருந்தது சூப்பரா எழுதி இருந்தாரு நான் இப்ப வரைக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் போடா போடி படத்தை ஹிந்தியில் எடுக்கக்கூடிய படம் தயவு செஞ்சு ஹிந்தியில் இந்த கதை இப்பவும் செட்டாகும் பழசு கிடையாது என பலமுறை கூறியதாக விஜய்சேதுபதி சொன்னார்.

Leave a Comment

Exit mobile version