குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே.? விஜய் சேதுபதி அதிரடி பேச்சு

சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகள் கடவுளை விமர்சித்து பேசுவதும் சம்பந்தமே இல்லாமல் மதத்தை விமர்சிப்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவர்கள் இவ்வாறு பேசுவதால் மற்ற நடிகர்களின் ரசிகர்களை காயப்படுத்தி வருகிறது, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டால் நான் மூட நம்பிக்கையை மட்டும் தான் எதிர்க்கிறேன் கடவுள் நம்பிக்கையை இல்லை என கூறி விடுவார்கள்.

இன்னும் சில பேர் நான் பகுத்தறிவாளன் என பெருமையாக சொல்லிக் கொள்வார்கள், ஆனால் அடிப்படையில் ஒருவரின் நம்பிக்கையை விமர்சிப்பது அநாகரிகம் கோழைத்தனம் அதைவிட அவமானமான செயல் என்னவென்றால் கடவுள் இல்லை என சொல்லிக்கொண்டு விசேஷ நாட்களில் முதல் ஆளாக கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவார்கள்.

உலக நாயகன் கமலஹாசனுக்கு பிறகு கடவுளை மறுப்பது, கடவுளை எதிர்த்து பேசுவது நடிகர் சத்யராஜ் தான் ஆனால் இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து வருகிறார் விஜய் சேதுபதி, சமீபத்தில் இவர் பேசிய பேச்சுதான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, சன் தொலைக்காட்சியில் நடிகர்களைப் பற்றி நான் ஒருவன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் ஹிந்து மதக் கடவுளை அசால்டாக அவமானப்படுத்தி உள்ளாராம், பொதுவாக இந்துக்களின் கோவில் சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் முன்னே செய்வார்கள் அதன்பின் துணி மாற்றும் பொழுது திரைபோட்டு மாற்றுவார்கள் இந்த சம்பவம் ஏதோ ஒரு கோவிலில் நடந்துகண்டிருக்க அதே கோவிலில் உள்ள சிறுமி தன்னுடைய தாத்தாவிடம் எதற்காக தாத்தா சாமி குளிக்கும்போது காட்டுகிறார்கள் துணி மாற்றும் பொழுது மட்டும் காட்ட மாட்றாங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்தத் தாத்தா சாமி குளிக்கும்பொழுது காட்டுவார்கள் உடை மாற்றும்போது திரை மூடிவிடுவார்கள் என கூறுகிறார் அதற்கு அந்த சிறுமி ‘குளிக்கும்போது காட்டுவதைப் போல் உடை மாற்றுவதையும் காட்டலாம்’ என கேட்டதாக அவருடைய சொந்த கருத்தை ஒரு சிறுமி கூறியதுபோல் விஜய்சேதுபதி பேசியுள்ளார், இதனை பேசி எப்பொழுதோ நடந்து முடிந்தது ஆனால் தற்பொழுது இந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாகி வருகிறது, விஜய் சேதுபதி இந்த பேச்சு பலருடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்று வருகிறது.

Leave a Comment