மாஸ்டர் படத்தை தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்க போகும் விஜய்சேதுபதி.? இது அவர் லிஸ்ட்லையே இல்லையே..

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லன் என அனைத்து விதமான ரோலிலும் நடித்து தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள அவர் நடிகர் விஜய் சேதுபதி.

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் இதில் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட செய்தார் விஜய் சேதுபதி.

திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மிக அபாரமாக இருப்பதாக பலரும் கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் துக்ளக் தர்பார் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த வெப்தொடரில் இவருடன் இணைந்து சாஹித் கபூர் நடிக்க உள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த வெப் தொடரில் அவர் நடிக்க உள்ளார் இதற்காக அவரது சம்பளம் பல கோடி ஏறி உள்ளது என தெரிய வருகிறது.

விஜய் சேதுபதியின் சம்பளம் 55 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. சாஹித் கபூர் 40 கோடி என கூறப்படுகிறது. இந்தி நடிகரை விட விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Leave a Comment

Exit mobile version