தல தளபதியை மிஞ்சும் அளவிற்கு தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவி செய்த விஜய் சேதுபதி.! ஆத்தாடி அதுவும் 250 பேருக்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் ரசிகர்கள்.!

சினிமாவில் சில நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும் அதனை அப்படியே தனக்கு மட்டுமே வேணும் என சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சிலருக்கு உதவி செய்வார்கள். அந்த வகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்கள் ஊரு உலகத்திற்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அஜித், விஜய் கூட தங்களுடைய ஒவ்வொரு படத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பெப்சி தொழிலாளர்களை பெரிதாக கண்டு கொள்வதே கிடையாது. அவசர காலத்திற்காக மட்டும் ஒரு சில உதவிகளை செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் மக்கள் செல்வன் என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் எப்பொழுதும் எதார்த்த மனிதராகவே இருப்பவர் அதுமட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் போது கூட எதார்த்தமாகத்தான் நடிப்பார். விஜய் சேதுபதி யாரிடமும் தலைகனத்தோடு நடந்து கொண்டதே கிடையாது அனைவரிடமும் அன்பும்  பாசத்தோடும் பழகுபவர். தன் மீது பாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என அவர்களிடம் பாசத்தை அதிகமாக காட்டுவார்.

அதேபோல் விஜய் சேதுபதி நடிக்கும் போது நடிகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் வில்லன் வேடம் என எதையும் ஏற்று நடிக்கும் மனப்பக்குவம் கொண்டவர் அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், பேட்ட ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் தற்பொழுது விஜய் சேதுபதி பாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்றால் அதனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். அந்த வகையில் சமீபகாலமாக விஜய் சேதுபதி வில்லனாக தான் அதிகமாக நடித்து வருகிறார். அப்படி இருக்கும் வகையில் மீண்டும் முயற்சி செய்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள். அதனால் வித்தியாசமான கதை தேர்வில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படி இருக்கும் வகையில் விஜய் சேதுபதி குறித்து பிரபல இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி ஒரு தகவலை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துள்ளார். அப்பொழுது செல்வமணி ஒருமுறை விஜய் சேதுபதி சந்தித்து பேசும் பொழுது பெப்சி யூனியன் பணிபுரியும் தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க பண பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார் உடனடியாக விஜய் சேதுபதி 250 பேருக்கு தலா ஒருவருக்கு 50,000 என்ற விகிதம் கொடுத்து உதவியுள்ளார்.

அதிலும் 30 லட்சம் இன்னும் தேவைப்பட்டதால் இது குறித்து விஜய் சேதுபதியிடம் கூறியதால் உடனடியாக மறுநாளே தேவையான பணத்தை தன்னுடைய உதவியாளர் மூலம் விஜய் சேதுபதி கொடுத்ததாக பேட்டியில் கூறினார். இப்படி விஜய் சேதுபதி பணத்தை பற்றி கவலைப்படாமல் தன்னிடம் இருப்பதை அனைவருக்கும் கொடுத்து உதவி வருகிறார். இவர் உதவும் மனதை வைத்து பெருமைப்பட வைத்துள்ளது.

Leave a Comment